For Daily Alerts
Just In
பெங்களூர் குண்டுவெடிப்பு குறித்து தகவல் கொடுத்தால் ரூ10 லட்சம் பரிசு: கர்நாடகா அரசு
பெங்களூர்: குண்டுவெடிப்பு குறித்து தகவல் கொடுத்தால் ரூ10 லட்சம் பரிசுத் தொகை வழங்கப்படும் என்று கர்நாடகா அரசு அறிவித்துள்ளது.
பெங்களூர் சர்ச் சாலையில் நேற்று இரவு குண்டுவெடித்ததில் சென்னையைச் சேர்ந்த பெண் பவானி உயிரிழந்தார். மேலும் மூவர் படுகாயமடைந்தனர்.
இந்த குண்டுவெடிப்பு சம்பவத்துக்கு அல் உம்மா அல்லது சிமி அமைப்புதான் காரணமாக இருக்கலாம் என்று சந்தேகிக்கப்பட்டு வருகிறது. இது தொடர்பாக தனிப்படைகள் அமைக்கப்பட்டு கர்நாடகா போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
தற்போது தேசியப் புலனாய்வு அமைப்பினரும் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த நிலையில் பெங்களூர் குண்டுவெடிப்பு சம்பவம் குறித்து தகவல் கொடுப்பவருக்கு ரூ10 லட்சம் சன்மானம் வழங்கப்படும் என்று கர்நாடகா அரசு அறிவித்துள்ளது.
Comments
English summary
A reward of Rs 10 lakh has been announced for any information regarding the suspects in the Church Street Blast, Bengaluru.
Story first published: Monday, December 29, 2014, 17:27 [IST]