For Daily Alerts
Just In
ஏழுமலையானுக்கு ரூ.11 கோடியில் சகஸ்ரநாம லட்சுமி காசு மாலை காணிக்கை
திருப்பதி ஏழுமலையானுக்கு ரூ.11 கோடியில் சகஸ்ரநாம லட்சுமி காசு மாலை காணிக்கையாக அளிக்கப்பட்டுள்ளது.
திருப்பதி: திருப்பதி ஏழுமலையானுக்கு வெளிநாடு வாழ் இந்தியர் ஒருவர் ரூ.11 கோடி மதிப்பிலான சகஸ்ரநாம லட்சுமி காசு மாலையை காணிக்கையாக செலுத்தியுள்ளார்.
திருப்பதியில் நேற்று 9 நாள்கள் கொண்டாடப்படும் பிரம்மோற்சவம் தொடங்கியது. இதையொட்டி நேற்றிரவு மலையப்பசுவாமி பெரிய சேஷ வாகனத்தில் உலா வந்தார். இந்நிலையில் திருப்பதி ஏழுமலையான் கோயிலுக்கு ரூ 11 கோடி மதிப்பில் நகை காணிக்கையாக வழங்கப்பட்டது.
சுமார் 5 அடுக்குகள் கொண்ட தங்க சகஸ்கரநாம லட்சுமி காசு மாலையை காணிக்கையாக வெளிநாட்டு வாழ் இந்திய பக்தரான ராமலிங்க ராஜூ என்பவர் வழங்கினார். இதை ஆந்திர மாநில முதல்வர் சந்திரபாபு நாயுடு முன்னிலையில் தேவஸ்தான அதிகாரிகளிடம் அவர் வழங்கினார்.
Comments
English summary
A NRI devotee donated Rs. 11 Crore worth Sahasranama Lakshmi Kassu maalai in front of CM Chandrababu Naidu.
Story first published: Sunday, September 24, 2017, 10:00 [IST]