ஹைதராபாத்தில் 2,000 ரூபாய் கள்ள நோட்டுக்களை அச்சடித்த 6 பேர் கைது
ஹைதராபாத் அருகே 2000 ரூபாய் கள்ளநோட்டுகளை அச்சடித்தாக 6 பேரை போலீசார் கைது செய்தனர்.
ஹைதராபாத்: தெலுங்கானா மாநிலம் ஹைதராபாத் அருகே புதிய 2,000 ரூபாய் கள்ள நோட்டுக்களை அச்சடித்த 6 பேர் கொண்ட கும்பல் போலீசார் கைது செய்தனர்.
ஹைதரபாத் அருகே உள்ள இப்ராஹிம்பட்டிணம் என்ற இடத்தில் சிலர் கள்ள ரூபாய் நோட்டுகளைத் அச்சடிப்பதாக போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. இதனைத் தொடர்ந்து காவல்துறையினர் அங்கிருந்த ஒரு வீட்டைச் சுற்றி வளைத்தனர்.
அங்கு ஆய்வு செய்ததில் மத்திய அரசு சமீபத்தில் வெளியிட்ட புதிய 2 ஆயிரம் ரூபாய் நோட்டுகள் 2 லட்சத்து 22 ஆயிரத்திற்கும், மற்ற ரூ100, ரூ50 உள்ளிட்ட சில பழைய ரூபாய் நோட்டுகளும் இருந்தன. அவை அனைத்தும் கள்ள நோட்டுகள் என்பது தெரியவந்தது. காவல்துறையினர் அவற்றை கைப்பற்றினர்.
மேலும், கள்ள நோட்டுகளைத் தயாரிக்கப் பயன்படுத்தப்பட்ட ஜெராக்ஸ் மிஷினும் பறிமுதல் செய்யப்பட்டது. கள்ள நோட்டுகளைத் தயாரித்ததாக 6 பேரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். தப்பியோடிய 2 பேரை தேடி வருகின்றனர்.