For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

புதிய ரூ500, ரூ2,000 நோட்டுகள் நாளை மறுநாள் முதல் ஏடிஎம்களில் கிடைக்கும்!

புதியதாக புழக்கத்தில் விடப்படும் ரூ500, ரூ2,000 நோட்டுகள் நவ.11 முதல் ஏடிஎம்களில் கிடைக்கும்,

By Mathi
Google Oneindia Tamil News

மும்பை: அதிக பாதுகாப்பு அம்சங்களைக் கொண்ட புதிய ரூ500, ரூ2,000 நோட்டுகள் நாளை மறுநாள் முதல் ஏடிஎம்களில் கிடைக்கும்.

நாடு முழுவதும் இன்று முதல் ரூ500, ரூ1,000 நோட்டுகள் செல்லாது என்பது அமலுக்கு வந்துள்ளது. இதையடுத்து அதிக பாதுகாப்பு அம்சங்களைக் கொண்ட புதிய ரூ500 மற்றும் ரூ2,000 நோட்டுகள் நாளை முதல் வங்கிகளில் அறிமுகப்படுத்தப்பட உள்ளன.

Rs 500; 2,000 to be available in ATMs from Nov 11.

இந்த புதிய நோட்டுகளின் வடிவங்களை ரிசர்வ் வங்கி நேற்று வெளியிட்டது. மேலும் இப்புதிய ரூபாய் நோட்டுகளை வங்கிகளில் கொண்டு சேர்க்க இன்று நாடு முழுவதும் வங்கிகள் மூடப்பட்டு பணப்பரிவர்த்தனை நிறுத்தப்பட்டுள்ளது.

நாளை முதல் வங்கிகளில் பழைய ரூ500, ரூ1,000 நோட்டுகளுக்கு பதிலாக புதிய மற்றும் மாற்று ரூபாய் நோட்டுகளைப் பெற்றுக் கொள்ள முடியும். மேலும் நாளை மறுநாள் (நவம்பர் 11) முதல் ஏடிஎம்களிலும் புதிய ரூ500, ரூ2,000 நோட்டுகளை பெற முடியும்.

இப்புதிய ரூ500, ரூ2,000 நோட்டுகள் அதிக பாதுகாப்பு அம்சங்களைக் கொண்டதாக தயாரிக்கப்பட்டுள்ளது. இவற்றில் நேனோ ஜிபிஎஸ் சிப் எனப்படும் தொழில்நுட்பம் பயன்படுத்தப்பட்டிருக்கிறதாம்.

அதாவது செயற்கைக் கோள்களில் இருந்து வெளியாகும் சிக்னல்களை இந்த தொழில்நுட்பம் வெளிப்படுத்தும். ஆகையால் இப்புதிய ரூபாய் நோட்டுகளை மொத்தமாக பதுக்கி வைத்தால் எளிதாக கண்டு பிடிக்கவும் முடியும்; பூமிக்கு அடியில் புதைத்து வைத்தாலும் செயற்கைக்கோள் மூலமாக எளிதாக கண்டுபித்துவிடவும் முடியுமாம்.

English summary
New high security notes of Rs 500 and 2,000 to be available in ATMs from Nov 11.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X