ரூ.17 லட்சம் மதிப்பிலான புதிய 2 ஆயிரம் ரூபாய் நோட்டுக்கள் கடத்தல்.. உடுப்பி அருகே பிடிபட்டது
கர்நாடக மாநிலம் உடுப்பியில் ரூ.17 லட்சம் மதிப்பிலான புதிய 2 ஆயிரம் ரூபாய் நோட்டுகளை காரில் கடத்திய 3 பேரை கைது செய்துள்ள போலீசார் அந்த பணத்தையும் பறிமுதல் செய்துள்ளனர்.
பெங்களூரு: கர்நாடக மாநிலம் மங்களூரில் இருந்து உடுப்பிக்கு காரில் கடத்தி வரப்பட்ட ரூ.17 லட்சம் மதிப்புள்ள புதிய 2 ஆயிரம் நோட்டுகளை பறிமுதல் செய்த போலீசார் சம்பந்தப்பட்ட 3 பேரையும் கைது செய்துள்ளனர்.
இதுகுறித்த விவரம் வருமாறு: கர்நாடக மாநிலம் மங்களூரில் இருந்து 3 பேர் அடங்கிய கும்பல் காரில் ரூ.17 லட்சம் மதிப்பில் புதிய 2 ஆயிரம் ரூபாய் நோட்டுகளை எடுத்து வந்தனர். அவர்களை கார்களா போலீசார் வழிமறித்து விசாரித்தனர்.
அப்போது அவர்கள் சரியான பதிலை சொல்லாமல் முன்னுக்கு பின் முரணாக பேசினர். அந்தப் பணம் எப்படி அவர்களுக்கு கிடைத்தது என்பது குறித்து தெளிவு படுத்தவில்லை. எனவே, அந்த பணத்தை பறிமுதல் செய்த போலீசார் அந்த மூவரையும் கைது செய்தனர். மங்களூரைச் சேர்ந்த அந்த மூவர் இம்ரான், ஆசிப் மற்றும் தீபக் என்பது விசாரணையில் தெரியவந்துள்ளது. மேலும் பறிமுதல் செய்யப்பட்ட பணம் வருமான வரித்துறையினரிடம் ஒப்படைக்கப்பட்டது.
இந்தப் பணம் யாருக்கு சொந்தமானது எங்கிருந்து கொண்டுவரப்பட்டது என்பது குறித்து இனனும் சரியான தகவல் கிடைக்கவில்லை என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.