விவாகரத்து - ஆர்.எஸ்.எஸ். தலைவர் மோகன் பகவத்தின் விவகாரமான விமர்சனம்- விசிக ரவிக்குமார் விளாசல்!
அகமதாபாத்: அதிகம் படித்தவர்கள், செல்வந்தர்கள் வீடுகளிதான் விவாகரத்து அதிகம் என்று ஆர்.எஸ்.எஸ். இயக்கத்தின் தலைவர் மோகன் பகவத் பேசியிருப்பது சர்ச்சையாகி உள்ளது.
குஜராத்தின் அகமதாபாத்தில் நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் மோகன் பகவத் பேசியதாவது:
இந்திய சமூக அமைப்பில் குடும்ப உறவுகள் சிதைகின்றன. இது ஒட்டுமொத்த சமூகத்தை பாதிக்கிறது. இந்தியாவைப் பொறுத்தவரையில் இந்து சமுதாயத்தைவிட மாற்று எதுவுமே கிடையாது.
அதிகமாக படித்தவர்கள் இருக்கும் வீடுகளிலும் பணக்காரர்களின் வீடுகளிலும்தான் விவாகரத்து அதிகமாக நடைபெறுகிறது. இதற்கு காரணமே கல்வி, செல்வம் இருக்கிறது என்கிற திமிர்தான். இதனால்தான் குடும்ப உறவுகள் சிதறிப் போகின்றன.
இவ்வாறு மோகன் பகவத் பேசினார்.
கடும் எதிர்ப்பு
Recommended Video
மோகன் பகவத்தின் இந்த பேச்சு கடும் சர்ச்சையாகி உள்ளது. சமூக வலைதளங்களில் மோகன் பகவத்தின் இப்பேச்சுக்கு கடும் எதிர்ப்பு கிளம்பியுள்ளது. விடுதலை சிறுத்தைகள் கட்சியின் லோக்சபா எம்.பி. ரவிக்குமார் தமது ட்விட்டர் பக்கத்தில், காட்டுமிராண்டிகளாகவே இருக்க விரும்பினால் காட்டுக்குப் போய்விடுவதே உத்தமம், நாட்டை காடாக்கக்கூடாது என சாடியுள்ளார்.