For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

நலமுடன்தான் இருக்கிறார் தாவூத்...கூட்டாளி சோட்டா ஷகீல் விளக்கம்

இந்திய அரசுக்கு சிம்ம சொப்பனமாக விளங்கும் நிழல் உலக தாதா தாவூத் இப்ராஹிம் மாரடைப்பால் காலமானார் என்று பரவிய செய்தி பொய்யானது என்றும்,தாவூத் நலமுடன்தான் உள்ளார் என்றும் கூட்டாளி சோட்டா ஷகீல்

By Devarajan
Google Oneindia Tamil News

டெல்லி: நிழல் உலக தாதா தாவூத் இப்ராகிம் இறந்து விட்டதாக வெளியான செய்திகளில் உண்மை இல்லை என்றும் தாவூத் இப்ராஹிம் நலமாகத்தான் உள்ளார் என்றும் தாவூத் கூட்டாளி சோட்டா ஷகீல் ஆங்கில ஊடங்கங்ளுக்கு அளித்துள்ள பேட்டியில் தெரிவித்துள்ளார்.

உடல்நலம் பாதிக்கப்பட்ட நிலையில் தாவூத் இப்ராஹிம் மருத்துவமனையில் சிகிச்சைப் பெற்று வருவதாக பாகிஸ்தான் ஊடகங்கள் செய்திகள் வெளியிட்டு பரபரப்பை ஏற்படுத்தியிருந்தன.

Rumours about Dawood Ibrahim health false, bhai is fit and fine: Chhota Shakeel

இந்நிலையில், இது தொடர்பாக கராச்சியில் டிவி ஒன்றிற்கு போன் மூலம் பேட்டி அளித்த தாவூத்தின் நெருங்கிய கூட்டாளியான சோட்டா ஷாகில், இந்த செய்திகள் அனைத்தும் பொய்யானவை. அனைத்தும் வதந்தி. தாவூத் நல்ல உடல் நலத்துடன், நலமாகவே உள்ளார்" என்று தெரிவித்துள்ளார்.

மும்பை குண்டுவெடிப்பில் முக்கிய குற்றவாளியாக அறிவிக்கப்பட்ட தாவூத் இப்ராஹிம் இந்திய அரசிடம் இதுவரை சிக்கவில்லை.இதனால் தாவூத்தை இந்திய அரசு தீவிரமாகத் தேடிவருகிறது.

English summary
Speculation is rife that notorious gangster Dawood Ibrahim is no more, after some Pakistani media outlets said he's been gravely ill. While reports of the 61-year-old gangster's death started doing the rounds on Friday, his long-time aide Chhotta Shakeel was at pains to refute any rumours that the gangster has died.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X