கொஞ்சம் ஆறுதல்.. சரிந்து வந்த ரூபாய் மதிப்பு திடீர் உயர்வு!
தொடர்ந்து அமெரிக்க டாலருக்கு எதிராக சரிந்து வந்த இந்திய ரூபாய் மதிப்பு தற்போது கொஞ்சம் உயர்வை சந்தித்துள்ளது.
டெல்லி: தொடர்ந்து அமெரிக்க டாலருக்கு எதிராக சரிந்து வந்த இந்திய ரூபாய் மதிப்பு தற்போது கொஞ்சம் உயர்வை சந்தித்துள்ளது.
இந்திய பொருளாதாரத்திற்கு இது மிகவும் மோசமான காலம் ஆகும். தினமும் ரூபாய் மிக மோசமான நிலையை அடைந்து வருகிறது.
நேற்று முதல்நாள் டாலருக்கு நிகரான இந்திய ரூபாய் மதிப்பு 72.67 ரூபாயை தொட்டது. நேற்று ரூபாய் மதிப்பு 72.08 ஆக இருந்தது. இது மேலும் சரியும் என்று எதிர்பார்க்கப்பட்டது.
இந்த நிலையில் சரிந்து வந்த ரூபாய் மதிப்பு திடீர் உயர்வை சந்தித்துள்ளது. டாலருக்கு நிகரான ரூபாய் மதிப்பு 50 காசுகள் உயர்ந்துள்ளது.
டாலருக்கு நிகரான இன்றைய ரூபாய் மதிப்பு ரூ. 71.68 ஆக உள்ளது. கடந்த ஒரு மாதமாக தொடர்ந்து ரூபாய் மதிப்பு சரிந்ததால் இதில் ஆர்பிஐ தலையிட்டு நடவடிக்கை எடுத்துள்ளது. தன்னிடம் உள்ள டாலர்களை வெளியிட்டு பண மதிப்பை உயர்த்தி உள்ளது.
இது இந்திய சந்தையில் கொஞ்சம் ஆறுதலான விஷயமாக பார்க்கப்படுகிறது. இது பெட்ரோல் டீசல் விலையிலும் மாற்றத்தை கொண்டு வர வாய்ப்புள்ளது.