மோடி-புடின் சந்திப்பில் 20 ஒப்பந்தங்கள் கையெழுத்தானது.. அமெரிக்க எச்சரிக்கையை புறம் தள்ளியது
ரஷ்ய அதிபர் விளாடிமிர் புடின் பிரதமர் மோடியுடன் இன்று டெல்லியில் சந்திப்பு நடத்துகிறார்.
Recommended Video
டெல்லி: ரஷ்ய அதிபர் விளாடிமிர் புடின் பிரதமர் மோடியுடன் இன்று டெல்லியில் சந்திப்பு நடத்தினார்.
நேற்று மாலை ரஷ்ய அதிபர் விளாடிமிர் புடின் இந்தியா வந்தார். இரண்டு நாள் பயணமாக இந்தியா வந்துள்ளார். நேற்று டெல்லி வந்த அவருக்கு சிறப்பான வரவேற்பு அளிக்கப்பட்டது.
இன்றுதான் பிரதமர் மோடியும் புடினும் சந்திப்பு நடத்துவதாக இருந்தது. ஆனால் நேற்று மாலையே மோடி ரஷ்ய அதிபர் புடினை சந்தித்தார். இருவரும் டெல்லியில் ஒரு மணி நேரம் உரையாடினார்கள்.
[அமலுக்கு வந்த பெட்ரோல், டீசல் விலை குறைப்பு.. தமிழகத்தில் விலை என்ன?]
எங்கு நடக்கிறது
இந்த நிலையில் இன்று பிரதமர் மோடி ரஷ்ய அதிபர் புடின் ஆகியோர் சந்திப்பு நடத்தி உள்ளனர். டெல்லியில் உள்ள ஹைதராபாத் ஹவுஸில் இந்த சந்திப்பு நடந்து உள்ளது. அங்கதான் பொதுவாக வெளிநாட்டு தலைவர்களை மோடி சந்திப்பது வழக்கம். இதனால் அங்கேயே அதிக பாதுகாப்போடு சந்திப்பு நடந்தது.
இரண்டாவதாக சந்திப்பு
இதனால் 24 மணி நேரத்தில் மோடியும், புடினும் இரண்டாவது முறையாக சந்தித்து இருக்கிறார்கள். இந்த சந்திப்பில் மொத்தம் 20 முக்கிய ஒப்பந்தங்கள் கையெழுத்தாகி உள்ளது. இந்த ஒப்பந்தம் கையெழுத்தாகும் போது இருநாட்டு பாதுகாப்பு துறை அமைச்சர்களும் உடன் இருந்தனர்.
என்ன ஒப்பந்தம்
விண்வெளி துறை, அணு சக்தி, பொருளாதாரம், வர்த்தகம் ஆகிய துறைகளிலும் ஒப்பந்தம் செய்யப்பட்டு உள்ளது. அதே சமயம் பாதுகாப்பு துறைக்கு அதிக முக்கியத்துவம் கொடுக்கப்பட்டு இருக்கிறது. மொத்தமாக 20 ஒப்பந்தம் கையெழுத்தாகி உள்ளது.
முக்கியம்
இன்று எஸ்-400 ஏவுகணை ஒப்பந்தமும் கையெழுத்தாகி உள்ளது. இந்த ஏவுகணை இந்த பாதுகாப்பு துறைக்கு வலு சேர்க்கும். இந்த ஒப்பந்தம் 36 ஆயிரம் கோடி ரூபாயில் கையெழுத்தாகி உள்ளது. ஏவுகணை ஒப்பந்தம் செய்தால் பொருளாதார தடை விதிக்கப்படும் என்று அமெரிக்கா எச்சரிக்கை விடுத்திருந்தது. அதையும் மீறி இன்று ஒப்பந்தம் செய்யப்பட்டு உள்ளது. இது பெரிய பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது.