For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

வாரணாசியில் ரஷ்ய பெண் மீது ஆசிட்வீச்சு: ஆபத்தான நிலையில் மருத்துவமனையில் அனுமதி

By Siva
Google Oneindia Tamil News

வாரணாசி: வாரணாசியில் ரஷ்யாவைச் சேர்ந்த இளம்பெண் மீது ஒருவர் ஆசிட் ஊற்றினார். இதில் படுகாயம் அடைந்த அந்த பெண் ஆபத்தான நிலையில் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

ரஷ்யாவைச் சேர்ந்த 23 வயது பெண் உத்தர பிரதேச மாநிலம் வாரணாசியில் உள்ள நந்த் நாக்ரி காலனியில் வசித்து வருகிறார். அவருடன் அவரது நண்பர் சித்தார் ஸ்ரீவஸ்தவா என்பவரும் தங்கி உள்ளார்.

Russian woman critical after acid attack in Varanasi

அந்த பெண் தினமும் காலை நடைபயிற்சிக்கு செல்வது வழக்கம். இன்றும் வழக்கம் போல நடைபயிற்சிக்கு சென்றபோது ஒருவர் அவர் மீது ஆசிட்டை ஊற்றிவிட்டு தப்பியோடினார். இதில் முகம், தோள்பட்டை வெந்துபோன அந்த பெண் ஆபத்தான நிலையில் பனாரஸ் இந்து பல்கலைக்ககழக மருத்துவமனையின் அவசர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

அவர் தங்கியிருக்கும் வீட்டு உரிமையாளரின் மகன் தான் அவர் மீது ஆசிட் ஊற்றியிருக்கக்கூடும் என்று கூறப்படுகிறது. இதற்கிடையே சித்தார்த் தலைமறைவாகியுள்ளார்.

பிரதமர் மோடியின் தொகுதியில் நடந்த இந்த சம்பவத்தால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

English summary
Unidentified man threw acid at a 23-year old Russian woman on friday morning in Varanasi.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X