டெல்லி- தென்னாப்பிரிக்காவுக்கு ரூ.13 கோடி போதைப் பொருளை கடத்த முயன்ற பெண்
டெல்லி: டெல்லியில் இருந்து தங்கள் நாட்டுக்கு ரூ.13 கோடி மதிப்புள்ள போதைப் பொருளை கடத்திச் செல்ல முயன்ற தென்னாப்பிரிக்க பெண் விமான நிலையத்தில் சிக்கினார்.
தென்னாப்பிரிக்காவைச் சேர்ந்த பெண் ஒருவர் நைரோபி வழியாக ஜொஹன்னஸ்பர்க் செல்ல கடந்த செவ்வாய்க்கிழமை அன்று டெல்லியில் உள்ள இந்திரா காந்தி சர்வதேச விமான நிலையத்திற்கு வந்தார்.
அப்போது அவரது உடைமைகளை அதிகாரிகள் சோதனையிட்டனர். சோதனையின்போது அவரிடம் 16 கிலோ மெதாகுவாலோன் என்ற போதைப் பொருள் இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது.
பார்ட்டி போதைப் பொருள் என்று கூறப்படும் அதன் மதிப்பு ரூ.12.80 கோடி ஆகும். அதிகாரிகள் போதைப் பொருளை பறிமுதல் செய்தனர். மேலும் அன்த பெண்ணை கைது செய்து விசாரித்து வருகின்றனர்.
முன்னதாக ரூ.64 லட்சம் மதிப்புள்ள தங்கத்தை துபாயில் இருந்து டெல்லிக்கு கடத்தி வந்த இரண்டு பேர் விமான நிலையத்தில் சிக்கினர் என்பது குறிப்பிடத்தக்கது.