For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

காங். ஆட்சியில் அமரும் வரை அதை தொட மாட்டேன்.. சச்சின் பைலட் சபதம்

Google Oneindia Tamil News

Recommended Video

    மக்களின் ஆசிர்வாதத்தால் காங்கிரஸ் வெல்லும் :சச்சின் பைலட்-வீடியோ

    ஜெய்ப்பூர்: ராஜஸ்தான் காங்கிரஸ் தலைவரான சச்சின் பைலட் அக்கட்சி ஆட்சியில் அமரும் வரை பாரம்பரிய தலைப்பாகை அணிய மாட்டேன் என சபதம் செய்துள்ளார்.

    காங்கிரஸ் கட்சி தேர்தலில் வெல்லும் என நம்பிக்கை தெரிவிக்கும் சச்சின், நான்கு வருடங்களுக்கு பின்னர் அதாவது 2014-ம் ஆண்டு காங்கிரஸ் ஆட்சிக்கு வரும் வரை டர்பன் அணியமாட்டேன் என சபதம் செய்த அவர் தற்போது டர்பன் அணிய காலம் கனிந்துவிட்டதாக கூறுகிறார்.

    Sachin Pilot pledged to not wear Turban until they win

    "எங்கள் கட்சி 2014ல் மிக மோசமாக தோற்றபோது எங்கள் கலாச்சாரத்தின் அடையாளமாக அணியும் டர்பனை மீண்டும் ஆட்சிக் கட்டிலில் அமரும் வரை அணிவதில்லை என்று சபதம் ஏற்றேன்.

    சட்டசபை தேர்தல் பிரச்சாரத்திற்கு சென்றபோது சிலர் டர்பனை பரிசாக வழங்கியதாகவும் அதை அணியாமல் தனது நெற்றியோடு ஒட்டி விட்டு வைத்துவிட்டதாகவும் தெரிவித்தார். "மக்களின் ஆசிர்வாதத்தால் காங்கிரஸ் மீண்டும் வெல்லும், நானும் டர்பனை அணியலாம்" என்று சச்சின் நம்பிக்கை தெரிவிக்கிறார்.

    முன்னாள் பாராளுமன்ற உறுப்பினரான சச்சின் முதல் முறையாக முஸ்லிம்கள் அதிகம் வசிக்கும் டாங்க் தொகுதியில் போட்டியிடுகிறார். அந்த தொகுதியில் சச்சினுக்கு எதிராக பாஜக சார்பில் யூனுஸ் கான் போட்டியிடுகிறார்.

    English summary
    Sachin pilot is contesting for the first time in Muslim-dominated Tonk constituency in Rajasthan.
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X