புத்தாண்டில் புது அவதாரம் எடுத்த சச்சின் டெண்டுல்கர்
டேராடூன்: முன்னாள் கிரிக்கெட் வீரர் சச்சின் டெண்டுல்கர் புத்தாண்டு அன்று நண்பர்கள் 45 பேருக்கு சமைத்து போட்டுள்ளார்.
முன்னாள் கிரிக்கெட் வீரர் சச்சின் டெண்டுல்கர் ஒவ்வொரு ஆண்டும் புத்தாண்டை உத்தரகண்ட் மாநிலம் டேராடூன் மாவட்டத்தில் உள்ள முசோரியில் குடும்பத்துடன் கொண்டாடுவதை வழக்கமாக கொண்டுள்ளார். இந்நிலையில் இந்த ஆண்டும் அவர் புத்தாண்டை கொண்டாட முசோரிக்கு குடும்பத்துடன் சென்றுள்ளார்.
புத்தாண்டு அன்று சச்சின் தனது நண்பர்கள் 45 பேருக்கு தனது கையால் சமைத்துப் போட்டுள்ளார்.
இது குறித்து அவர் ஃபேஸ்புக்கில் கூறியிருப்பதாவது,
45 நண்பர்களுக்கு பைங்கன் பர்தா சமைத்துக் கொடுத்தேன். என் தாய் தான் இதை சமைக்க கற்றுக் கொடுத்தார். அன்புடன் சமைத்துக் கொடுத்ததை அவர்கள் விரும்பிச் சாப்பிட்டனர் என்று தெரிவித்துள்ளார்.
மேலும் தான் சமைக்கையில் எடுத்த புகைப்படத்தையும் சச்சின் ஃபேஸ்புக்கில் வெளியிட்டுள்ளார்.