உலகையே சிரிக்க வைத்த மகத்தான கலைஞன் சார்லி சாப்ளினுக்கு அஞ்சலி செலுத்திய சச்சின்
டெல்லி: உலகையே சிரிக்க வைத்த மகத்தான கலைஞன் சார்லி சாப்ளினுக்கு கிரிக்கெட் ஜாம்பவான் சச்சின் டெண்டுல்கர் அஞ்சலி செலுத்தியுள்ளார்.
கிரிக்கெட்டில் பல சாதனைகளை படைத்த சச்சின் டெண்டுல்கர், சர்வதேச கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெற்ற பிறகு சமூக வலைதளங்களில் தொடர்ந்து தனக்கு பிடித்தமானவற்றை பகிர்ந்து வருகிறார். அதேபோல் தான் பங்கேற்கும் விழாக்களின் புகைப்படங்களையும் டுவிட்டரில் பதிவிட்டு வருகிறார்.
இந்நிலையில் திரைப்படத்துறையில் என்றும் அழியாத படங்களை வழங்கிய, தன் கண்ணீரை மறைத்துக்கொண்டு உலகையே சிரிக்க வைத்த மாபெரும் கலைஞர் சார்லி சாப்ளினுக்கு அஞ்சலி செலுதித்தியுள்ளார் சச்சின்.
சச்சின் தனது டுவிட்டர் பக்கத்தில் சார்லி சாப்ளின் சிலை அருகே சிரித்தப்படி இருக்கும் தன் படத்தை பகிர்ந்துள்ளார். மேலும் அந்த படத்திற்கு கீழே " நம்மை சிரிக்க வைக்க தவறாத ஒரு மாபெரும் நகைச்சுவை நடிகர், இயக்குனர் சார்லி சாப்ளின்" என்று சாப்ளினை புகழ்ந்துள்ளார் சச்சின்.
A person who has never failed to tickle our funny bones.An actor, comedian & director par excellence #CharlieChaplin pic.twitter.com/IuUEiCNraz
— sachin tendulkar (@sachin_rt) June 15, 2016