ஸ்டைல் குருவாக புதிய அவதாரம் எடுத்துள்ள 'கடவுள்'
மும்பை: முன்னாள் கிரிக்கெட் வீரர் சச்சின் டெண்டுல்கர் அரவிந்த் பேஷன் பிராண்ட்ஸுடன் இணைந்து ட்ரூ ப்ளூ என்கிற ஆண்களுக்கான ஆடைகள் பிராண்டை துவங்கியுள்ளார்.
சச்சின் டெண்டுல்கர் கடந்த 2013ம் ஆண்டு கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெற்றார். இந்நிலையில் சச்சின் அரவிந்த் பேஷன் பிராண்ட்ஸுடன் கைகோர்த்துள்ளார். ஆண்களுக்கான ப்ரீமியம் ஆடைகளை அறிமுகப்படுத்துகிறார்கள்.
அந்த பிராண்டுக்கு ட்ரூ ப்ளூ என்று பெயர் வைக்கப்பட்டுள்ளது. ட்ரூ ப்ளூ ஷோரூம் வரும் மே மாதம் மும்பையில் துவங்கப்படுகிறது. அதன் பிறகு பெங்களூரில் ஷோரூம் திறக்கப்படுகிறது.
28 முதல் 40 வயது வரை உள்ள ஆண்களுக்கான ட்ரூ ப்ளூ ஆடைகள் ரூ.1,200ல் இருந்து 3,500 வரை விற்கப்படும். அடுத்தபடியாக ஆண்களுக்கான பெல்ட், பர்ஸுகள் தயாரித்து விற்கும் திட்டமும் உள்ளது.
சச்சின் ஸ்டைல் குருவாக மாறியுள்ள ட்ரூ ப்ளூ ஷோரூம்களை 25 இடங்களில் திறக்க திட்டமிடப்பட்டுள்ளது.