பீஃப் சாப்பிட்டால் கழுத்தை அறுங்கள்.. சாத்வி சரஸ்வதி சர்ச்சை.. பீஃப் சமைத்து அனுப்பும் மலையாளிகள்
சானதன தர்ம பிரச்சார சேவா சமிதியின் தலைவர் சாத்வி சரஸ்வதி என்ற பெண், கேரளாவில் மாட்டுக்கறிக்கு எதிராக பேசி பெரிய பிரச்சனையில் சிக்கியுள்ளார்.
திருவனந்தபுரம்: சானதன தர்ம பிரச்சார சேவா சமிதியின் தலைவர் சாத்வி சரஸ்வதி என்ற பெண், கேரளாவில் மாட்டுக்கறிக்கு எதிராக பேசி பெரிய பிரச்சனையில் சிக்கியுள்ளார். அவருக்கு கேரளா மக்கள் எல்லோரும் மாட்டுக்கறி உணவுகளை சமைத்து புகைப்படம் எடுத்து அனுப்பி வருகிறார்கள்.
கேரளாவில், காசர்கோட்டில் நடந்த இந்துத்துவா நிகழ்வு ஒன்றில் பேசிய சாத்வி, கேரளா மக்கள் மாட்டுக்கறி உண்ண கூடாது, அப்படி சாப்பிடும் நபர்களை நாட்டைவிட்டு வெளியே அனுப்ப வேண்டும். அவர்களின் கழுத்தை அறுக்க வேண்டும் என்று எச்சரிக்கை விடுத்தார். ஆனால் இவரது பேச்சு பார்த்து, மலையாளிகள் அவரை கிண்டல் செய்து கொண்டு இருக்கிறார்கள்.
அவரது பேஸ்புக் பக்கத்தில் வரிசையாக மாட்டுக்கறி உணவுகளை அனுப்பி சாப்பிடுங்கள் நன்றாக இருக்கும் என்று கூறி கிண்டல் செய்து கொண்டு இருக்கிறார்கள். இதை எப்படி சமாளிப்பது என்று தெரியாமல் அவர் திணறி வருகிறார்.
மாநிலஉணவு
இவர் ''மாட்டுக்கறி வறுவலும் பரோட்டாவும்தான் எங்களின் தேசிய உணவு. நீங்கள் எங்களின் கழுத்தை வெட்ட வேண்டுமா? வடஇந்தியர்கள்தான் பாஜகவையும், ஆர்எஸ்எஸையும் பார்த்து பயப்படுவார்கள், இது இடதுசாரிகளின் கேரளா. ஆர்எஸ்எஸ் எல்லாம் இங்கே தினமும் காமெடி செய்வார்கள், நாங்கள் சிரிப்போம் அவர்களை பார்த்து'' என்று மாட்டுக்கறி புகைப்படத்தை அனுப்பி உள்ளார்கள்.
பரோட்டோ காம்பினேஷன்
இந்த பெண் ''நீங்கள் இதற்கு முன் பரோட்டாவுடன் மாட்டுக்கறி சாப்பிட்டு இருக்கிறீர்களா? மிகவும் நன்றாக சுவையாக இருக்கும்'' என்று போட்டோ அனுப்பி இருக்கிறார்.
பாஜக கட்சியில கூட இருக்காங்க
இவர் கேராளவை சேர்ந்த பாஜக கட்சியின் முக்கிய உறுப்பினரான எம்டி ரமேஷ் மாட்டுக்கறி சாப்பிடும் பிரபலமான புகைப்படத்தை வெளியிட்டு கிண்டல் செய்து இருக்கிறார்.
எங்ககிட்டயேவா
இவர் ''நீங்கள் இப்போதுதான் முதல்முறையாக இப்படி கேரளாவிற்கு எதிராக பேசுகிறீர்கள் என்று நினைக்கிறேன். இப்போது உங்களுக்கு மலையாளிகளின் பலம் தெரிந்து இருக்கும். வேற்றுமையில் ஒற்றுமைதான் எங்கள் குறிக்கோள்.'' என்றுள்ளார்.