சல்மான் கானை கொலை செய்யப் போகிறேன்: போன் மூலம் மர்ம நபர் மிரட்டல்
மும்பை: பாலிவுட் நடிகர் சல்மான் கானை கொலை செய்யப் போவதாக ஒருவர் மும்பை போலீஸ் கட்டுப்பாட்டு அறைக்கு போன் செய்து கூறியுள்ளார்.
கடந்த 16ம் தேதி மும்பை போலீஸ் கட்டுப்பாட்டு அறைக்கு ஒரு போன் அழைப்பு வந்தது. எடுத்துப் பேசியபோது மறுமுனையில் இருந்த நபர் பாலிவுட் நடிகர் சல்மான் கானை கொலை செய்யப் போவதாகக் கூறிவிட்டு இணைப்பை துண்டித்துவிட்டார்.
அந்த அழைப்பு எந்த இடத்தில் இருந்து வந்தது என்று போலீசார் கண்டுபிடித்து விசாரணை நடத்தி வருகின்றனர். இருப்பினும் இது குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்யவில்லை. இந்நிலையில் சல்மான் கானுக்கு பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது.
பஜ்ரங்கி பாய்ஜான், பிரேம் ரத்தன் தன் பாயோ ஆகிய ஹிட் படங்களை அளித்துள்ள சல்மான் கான் தற்போது சுல்தான் படத்தில் குத்துச் சண்டை வீரராக நடித்து வருகிறார். அந்த படத்தில் அனுஷ்கா சர்மா ஹீரோயினாக நடிக்கிறார்.
கொலை மிரட்டல் விடுக்கப்பட்டது குறித்து சல்மான் கான் அலுவலகம் கருத்து தெரிவிக்கவில்லை.