சத்தீஷ்கரில் சமாஜ்வாதி கட்சி தலைவரை கடத்திக் கொன்ற மாவோயிஸ்டுகள்.. உடலை எடுக்கவிடாமல் அட்டூழியம்
பிஜாபூர்: சத்தீஷ்கர் மாநிலத்தில் சமாஜ்வாதி கட்சி தலைவர் சந்தோஷ் புனேம் மாவோஸ்ட்டு தீவிரவாதிகளால் கடத்தி கொல்லப்பட்டுள்ளார். பிஜாபூர் மாவட்டத்தில் நடந்த இந்த படுகொலை சம்பவத்தை போலீசார் உறுதிபடுத்தி உள்ளனர்.
சத்தீஷ்கர் மாநிலத்தில் உள்ள பிஜாபூர் மாவட்டத்தின் பாஸ்டர் பகுதியைச் சேர்ந்தவர் சந்தோஷ் புனேம். இவர் சத்தீஷ்கர் மாநில சமாஜ்வாதி கட்சியின் துணை தலைவராக இருந்து வந்தார். இவர் அண்மையில் பிஜாபூர் சட்டமன்ற தொகுதியில் சமாஜ்வாதி சார்பில் போட்டு தோல்வி அடைந்தார்.
இவர் கட்டிடங்கள் கட்டும் ஒப்பந்ததாரராக பணியாற்றி வருகிறார். மரிமாலா என்ற கிராமத்தில் கட்டப்பட்டு வந்த கட்டிடத்தை பார்வையிடுவதற்காக சந்தோஷ் அங்கு செவ்வாய்கிழமை சென்று இருந்தார். அப்போது மாவோயிஸ்ட் தீவிரவாதிகள் சந்தோஷை அடித்து மிரடடி கடத்தி சென்றனர்.
40 வயது சுலோச்சனாவிடம் சில்மிஷம்.. பிரசாந்த்துக்கு வயசு 21தான்.. அள்ளி கொண்டு போன போலீஸ்!
இந்நிலையில் சந்தோஷின உடல் மரிமாலா பகுதியைச் சேர்ந்த காவல்நிலையத்தில் இருந்து 16 கிலோமீட்டர் தள்ளி அடர்ந்த வனப்பகுதியில் ரத்த வெள்ளத்தில் பிணமாக கிடந்தார்.. இது தொடர்பாக தகவல் அறிந்து அங்கு சென்று போலீசார் உடலை மீட்க முயன்றனர்.
இதற்காக ஒரு பொலிரோ வாகனம் உள்பட 3 வாகனங்களில் போலீசார் சென்றுள்ளனர். ஆனால் வாகனத்தை தாக்கி தீவைத்து மாவோஸ்ட்டுகளின் அட்டூழியம் செய்தனர். மேலும் சந்தோஷின் உடலை அவரது குடும்பத்தினரிடம் ஒப்படைக்கவும் மாவோயிஸ்டுகள் மறுத்துவிட்டனர்.