வாக்காளர் அட்டையில் 'மகேஸ்வரம்மா'வாக மாறிய சமந்தா...!
ஹைதராபாத்: ஆந்திரப் பெண் ஒருவரின் வாக்காளர் அட்டையில் தவறுதலாக நடிகை சமந்தாவின் புகைப்படம் இடம் பெற்றுள்ளது.
தமிழில் பானா காத்தாடி படம் மூலம் அறிமுகமானவர் நடிகை சமந்தா. தற்போது இவர் தெலுங்கு மற்றும் தமிழில் முன்னணி நடிகைகளில் ஒருவராக வலம் வருகிறார்.
இந்நிலையில் ஆந்திர மாநிலம், மெகபூப் நகரைச் சேர்ந்தவர் மகேஸ்வரம்மா என்ற பெண்மணி. சமீபத்தில் தேர்தல் ஆணையம் சார்பில் இவருக்கு வழங்கப் பட்ட வாக்காளர் அடையாள அட்டையில் அவரது புகைப்படத்திற்கு பதிலாக நடிகை சமந்தாவின் புகைப்படம் இருந்தது கண்டு அதிர்ச்சி அடைந்துள்ளார்.
வாக்காளர் அடையாள அட்டையில் தவறுதலாக மகேஸ்வரம்மாவின் புகைப் படத்திற்கு பதிலாக நடிகை சமந்தாவின் படம் எப்படி வந்தது என சம்பந்தப்பட்ட அதிகாரிகள் கவனத்திற்கு கொண்டு சென்ற போது, தவறு எங்கே நடந்தது என்பது குறித்து விசாரணை நடப்பதாகத் தெரிவித்துள்ளனர்.