சானா இக்பால் மரணத்தில் திடுக்கிடும் திருப்பம்.. தாய் பரபரப்பு குற்றச்சாட்டு
ஹைதராபாத்: விபத்தில் பிரபல பெண் பைக் சாதனையாளர் சனா இக்பால் உயிரிழந்ததாக போலீஸ் தரப்பில் கூறினாலும், இது ஒரு கொலை என்று அவரது குடும்பத்தார் தெரிவிக்கிறார்கள்.
ஹைதராபாத் புற நகர் பகுதியில் கணவருடன் நேற்று அதிகாலை காரில் பயணித்தபோது, சாலை தடுப்பில் மோதி சானா இக்பால் இறந்துவிட்டதாக தகவல் வெளியாகியுள்ளது.
கணவர் காயங்களோடு சிகிச்சை பெறுவதாகவும் போலீசார் தெரிிவித்தனர். விபத்து நடந்த இடத்தில் எடுக்கப்பட்ட புகைப்படங்களும் வெளியாகியுள்ளன.
தாய் பேட்டி
இந்த நிலையில், சானாவின் தாயாரும், வழக்கறிஞருமான சஹீன் கான் கூறுகையில், சனாவின் திருமண வாழ்க்கை தொடர்ந்து தொல்லைக்குள்ளாகவே இருந்தது. ஆரம்பம் முதலே சானா மகிழ்ச்சியாக இல்லை.
குடும்ப வாழ்க்கை
குறுகிய காலமே கணவரோடு சானா வாழ்ந்தார். பிறகு, எங்கள் வீட்டில்தான் சானா வசித்தார். ஒருவரும் சானா மீது அக்கறை காட்டவில்லை. சானாவின் வாழ்க்கையில் தினமும் வேதனைதான்.
வருந்தி பேசினார்
சனிக்கிழமை கூட, இந்த நரகத்திலிருந்து தன்னை மீட்குமாறு சானா என்னிடம் தெரிவித்தார். ஆனால், நான் சென்னை சென்று கொண்டிருந்ததால், திரும்பி வந்ததும், சரி செய்கிறேன் என்று தெரிவித்திருந்தேன்.
விசாரணை தேவை
நான் சென்னை சென்ற நேரத்திற்குள்ளாக இப்படி ஒரு சம்பவம் நடந்துள்ளது. விபத்து போல ஜோடிக்கப்பட்டு கொலை அரங்கேற்றப்பட்டுள்ளது. காவல்துறை இதில் தக்க விசாரணை நடத்த வேண்டும். இவ்வாறு அவர் தெரிவித்தார்.