சிறை போர் அடிச்சா வீடு, வீடு போர் அடிச்சா சிறை: சஞ்சய் தத்தை கிண்டல் செய்யும் மக்கள்
மும்பை: 5வது முறையாக பரோலில் வந்துள்ள பாலிவுட் நடிகர் சஞ்சய் தத்தை மக்கள் ட்விட்டரில் கிண்டல் செய்து வருகிறார்கள்.
1993ம் ஆண்டு மும்பையில் தொடர் குண்டு வெடிப்பு நடந்தபோது வீட்டில் பயங்கர ஆயுதங்களை வைத்திருந்த வழக்கில் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ள பாலிவுட் நடிகர் சஞ்சய் தத் 4 முறை பரோலில் வந்தார். இந்நிலையில் மகளின் மூக்கு அறுவை சிகிச்சைக்காக 30 நாட்கள் பரோலில் வந்துள்ளார்.
5வது முறையாக பரோலில் வந்துள்ள சஞ்சய் தத்தை மக்கள் ட்விட்டரில் கிண்டல் செய்கிறார்கள்.
|
போர்
சஞ்சய் தத்துக்கு சிறை சம்மர் கேம்ப் போன்றது. சிறையில் போர் அடித்தால் வீட்டிற்கு வந்துவிடுவார், அங்கு போர் அடித்தால் சிறைக்கு சென்றுவிடுவார் என கௌதம் திரிவேதி ட்வீட் செய்துள்ளார்.
|
உடல்நலக்குறைவு
நம் குடும்ப உறுப்பினர் யாருக்காவது உடல்நலம் பாதிக்கப்பட்டால் நமக்கு எல்லாம் அது கெட்ட செய்தி...ஆனால் சஞ்சய் தத்துக்கு அது நல்ல செய்தி.. அவருக்கு பரோல் கிடைத்துவிடும் அல்லவா என அஷோக் தெரிவித்துள்ளார்.
|
விடுமுறை
சஞ்சய் தத்துக்கு என்னை விட அதிகமாக விடுமுறை கிடைக்கிறது என்கிறார் ஷீத்தல் ராஜகோபால்.
|
சஞ்சய்
பரோலில் வருவதில் சஞ்சய் தத் புதிய சாதனை படைத்துள்ளார்...அவர் குற்றவாளிகளுக்கு பரோல் பெற்றுத் தரும் நிறுவனத்தை துவங்குவார்.. அதிக கட்டணம் வாங்குவார் என அசோக் கரேகர் ட்விட்டரில் தெரிவித்துள்ளார்.