இந்தியாவில் சமஸ்கிருதம் பேசுவோர் எண்ணிக்கை இவ்வளவுதானா..? சென்செஸ் கூறுவதை பாருங்கள்
Recommended Video
டெல்லி: சமஸ்கிருதம்தான், இந்தியாவில், பட்டியலிடப்பட்ட 22 மொழிகளில் மிக குறைந்த மக்களால் பேசப்படும் மொழி என தெரியவந்துள்ளது.
சமஸ்கிருதம் பண்டைய மொழி என கூறப்படுகிறது. வெளியுறவுத்துறை அமைச்சர் சுஷ்மா சுவராஜ் பதவி பிரமாணம் செய்தபோது சமஸ்கிருதத்தில் அதை செய்தார்.
ஒரு குறிப்பிட்ட முன்னேறிய ஜாதி பிரிவின் வட்டத்தில் புழங்கும் மொழியாக உள்ள சமஸ்கிருதத்தை மத்திய அரசும், முடிந்த அளவுக்கு ஃப்ரமோட் செய்யும் வேலைகளில் ஈடுபட்டுக்கொண்டுள்ளது. பள்ளிகளில் சமஸ்கிருதம் ஒரு பாடமாக கற்றுத்தரும் வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது.
ஆனால் 2011ம் ஆண்டு எடுக்கப்பட்ட மக்கள் தொகை புள்ளி விவரப்படி, சமஸ்கிருதம் பேசுவோர் 24,821 மட்டுமே உள்ளனர். இவர்கள்தான் தங்கள் தாய் மொழி என சமஸ்கிருதத்தை குறிப்பிட்டுள்ளனர்.
போடோ, மணிப்பூரி, கொங்கணி மற்றும் டோக்ரி மொழி பேசுவோரைவிடவும், சமஸ்கிருதம் பேசுவோர் எண்ணிக்கை மிகவும் குறைவாகும்.
இருப்பினும், தமிழகத்திலுள்ள பெரிய கோயில்களில், பழமையான கோயில்களில் சமஸ்கிருத மொழியில் அர்ச்சனைகள் செய்வது பாரம்பரியமாக உள்ளது. சமீபகாலமாக தமிழில் இறைவனுக்கு அர்ச்சனை செய்யும் நடைமுறைக்கு பக்தர்கள் மாறத்துவங்கியுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.