For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

சாரதா சிட் பண்ட் மோசடி: திரிணாமுல் எம்.பி. சிரின்ஜோய் போஸ் அதிரடியாக கைது!!

By Mathi
Google Oneindia Tamil News

கொல்கத்தா: சாரதா சிட் பண்ட் மோசடி வழக்கில் புதிய திருப்பமாக திரிணாமுல் காங்கிரஸ் கட்சியின் ராஜ்யசபா எம்.பி. சிரின்ஜோய் இன்று அதிரடியாக சிபிஐ அதிகாரிகளால் கைது செய்யப்பட்டார். மமதா பானர்ஜிக்கு மிகவும் நெருக்கமானவர் சிரின்ஜோய் போஸ் என்பதால் அவருக்கு இது பெரும் பின்னடைவு.

Saradha Scam: Setback for Mamata Banerjee, TMC MP Srinjoy Bose arrested

பல்லாயிரம் கோடி அளவுக்கு பொதுமக்கள் பணத்தை வசூலித்துவிட்டு ஏமாற்றியதாக தொடரப்பட்ட சாரதா சிட் பண்ட் மோசடி வழக்கில் ஏற்கனவே பலர் கைது செய்யப்பட்டுள்ளனர். திரிணாமுல் கட்சி எம்.பி குணால் கோஷும் கைது செய்யப்பட்டிருக்கிறார். அவர் திரிணாமுல் கட்சியில் இருந்து சஸ்பென்ட் செய்யப்பட்டார்.

இந்த நிலையில் மேற்கு வங்க முதல்வர் மமதா பானர்ஜிக்கு மிக நெருக்கமான ராஜ்யசபா எம்.பி. சிரின்ஜோய் போஸுக்கு சிபிஐ சம்மன் அனுப்பியது. இதனைத் தொடர்ந்து இன்று சிபிஐ முன்பு ஆஜராக போஸிடம் 6 மணிநேரம் கிடுக்கிடுப்பிடி விசாரணை நடைபெற்றது.

அப்போது சாரதா சிட் பண்ட் நிறுவன உரிமையாளர் சுதீப்தோ சென்னை மிரட்டி மாதந்தோறும் ரூ60 லட்சம் பணம் வாங்கியது குறித்து துருவித் துருவி சிபிஐ அதிகாரிகள் கேள்வி எழுப்பினர். மேலும் 2010ஆம் ஆண்டு சாரதா குழுமம் மற்றும் சென் ஊடக நிறுவனம் தொடங்குவதற்கு சிரின்ஜோய் போஸ் உதவியதாகவும் சிபிஐ குற்றம்சாட்டியுள்ளது.

English summary
The Central Bureau of Investigation (CBI) arrested Trinamool Congress (TMC) MP Srinjoy Bose on Friday, Nov 21. The MP has been arrested in connection with his alleged link with infamous Saradha scam.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X