For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

சுனந்தா புஷ்கர் மரண வழக்கு: சசி தரூருக்கு முன்ஜாமீன்

சுனந்தா புஷ்கர் மரண விவகாரத்தில் சசி தரூருக்கு முன்ஜாமீன் கிடைத்துள்ளது.

By Lakshmi Priya
Google Oneindia Tamil News

டெல்லி: சுனந்தா புஷ்கர் மரண விவகாரத்தில் சசி தரூருக்கு டெல்லி பாட்டியாலா நீதிமன்றம் முன்ஜாமீன் வழங்கியது.

மத்திய முன்னாள் அமைச்சரும், எம்.பி.யுமான சசி தரூரின் மனைவி சுனந்தா புஷ்கா் கடந்த 2104-ஆம் ஆண்டு ஜனவரி 17-ல் டெல்லியில் உள்ள நட்சத்திர விடுதி அறையில் மா்மமான முறையில் இறந்து கிடந்தாா். இதுதொடா்பாக டெல்லி போலீஸாா் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனா்.

Sasi Tharoor gets anticipatory bail

இந்நிலையில், போலீஸ் தரப்பில் 3,000 பக்கங்கள் கொண்ட குற்றப்பத்திரிகை டெல்லி பெருநகர நீதிமன்றத்தில் அண்மையில் தாக்கல் செய்யப்பட்டது. அதில் சுனந்தாவை தற்கொலைக்கு சசி தரூா் தூண்டியிருக்க வாய்ப்புள்ளதாகவும், சுனந்தாவுக்கு அவா் கொடுமை செய்ததற்கான முகாந்திரம் இருப்பதாகவும் தெரிவிக்கப்பட்டிருந்தது.

மேலும், இதுதொடா்பாக அவருக்கு அழைப்பாணை அனுப்பி விசாரணை மேற்கொள்ள அனுமதிக்குமாறும் வலியுறுத்தப்பட்டது. அதை ஏற்றுக்கொண்ட நீதிமன்றம், சசி தரூருக்கு சம்மன் அனுப்ப உத்தரவிட்டது.

அதன்படி வரும் 7-ஆம் தேதி அவா் நேரில் ஆஜராக வேண்டும் என்று அறிவுறுத்தப்பட்டது. இதையடுத்து, இந்த வழக்கில் சசி தரூரை போலீஸாா் கைது செய்ய வாய்ப்பு இருப்பதாக தகவல் வெளியானது. இந்நிலையில் அவர் டெல்லி பாட்டியாலா நீதிமன்றத்தில் முன்ஜாமீன் கோர மனு தாக்கல் செய்தார்.

அதன் மீதான விசாரணை இன்று நடைபெற்றது. அதில் சசி தரூருக்கு நிபந்தனையுடன் கூடிய முன்ஜாமீன் வழங்கப்பட்டது. ரூ. 1 லட்சம் பிணைத் தொகையாக செலுத்துமாறு சசி தரூருக்கு நீதிமன்றம் உத்தரவிட்டது.

English summary
Sasi Tharoor gets anticipatory bail from Sunanda death case. It was issued by Delhi patiala Court.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X