கோரிக்கைகள் மறுக்கப்பட்டதால் கோபத்தில் சாதாரண கைதி அறையில் தங்கியுள்ள சசிகலா
கோரிக்கைகள் மறுக்கப்பட்டதால் கோபமடைந்த சசிகலா சாதாரண அறையில் தங்கியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
பெங்களூரு: சொத்துக்குவிப்பு வழக்கில் பெங்களூரு சிறையில் அடைக்கப்பட்டுள்ள சசிகலா சிறை நிர்வாகத்திடம் சில கோரிக்கைகளை விடுத்தார். அதனை சிறை நிர்வாகம் வழங்க மறுத்ததால் கோபமடைந்த சசிகலா சாதாரண அறையிலேயே தங்கிக்கொள்வதாக தெரிவித்து சென்றுள்ளார்.
சொத்துக்குவிப்பு வழக்கில் சசிகலா அவரது அண்ணி இளவரசி மற்றும் அக்காள் மகன் சுதாகரன் ஆகியோருக்கு 4 ஆண்டுகள் சிறை தண்டனையும் தலா 10 கோடி ரூபாய் அபராதமும் வித்கக்ககப்பட்டது. இதைத்தொடர்ந்து அவர்கள் 3 பேரும் நேற்று பெங்களூரு சிறையில் பரப்பன அக்ரஹார சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர்.
சசிகலா விஐபி அறை, ஏசி அறை, வெஸ்டர்ன் டாய்லெட், வீட்டு சாப்பாடு உள்ளிட்டவற்றை சிறை நிர்வாகத்திடம் கேட்டிருந்தார். ஆனால் அதனை சிறை நிர்வாகம் தர மறுத்து விட்டதால் கோபமடைந்த சசிகலா சாதாரண அறையிலேயே தங்கிக்கொள்வதாக கூறியுள்ளார். தற்போது சசிகலாவும், இளவரசியும் சாதாரண அறையில்தான் தங்கியுள்ளனர்.