பாலியல் தொல்லை புகார்... கைது அச்சத்தால் டெல்லி ஹைகோர்ட்டில் முன்ஜாமீன் கோரி சசிகலா புஷ்பா மனு!!
டெல்லி: வீட்டில் வேலைபார்த்த இளம்பெண்கள் தூத்துக்குடி போலீசில் பாலியல் தொல்லை புகார் கொடுத்ததைத் தொடர்ந்து கைது செய்யப்படுவோமோ என்ற அச்சத்தில் டெல்லி உயர்நீதிமன்றத்தில் தமக்கு முன்ஜாமீன் தரக் கோரி அதிமுகவில் இருந்து டிஸ்மிஸ் செய்யப்பட்ட எம்பி சசிகலா புஷ்பா மனுத்தாக்கல் செய்துள்ளார்.
சசிகலா புஷ்பா மீது அடுத்தடுத்த புகார்கள் போலீசுக்கு வந்து கொண்டே இருக்கிறது. இதில் உச்சகட்டம் அவரது வீட்டில் வேலை பார்த்த 2 இளம்பெண்கள், தூத்துக்குடி போலீசில் நேற்று கொடுத்ததுதான்.
அதில், சசிகலா புஷ்பா இரவில் நிர்வாணமாக மசாஜ் செய்துவிட சொல்வார்; அமைச்சர் பழனியப்பனுடன் குடித்து கும்மாளம் போடுவார்; அவரது மகன் பாலியல் தொல்லை கொடுத்தாலும் அட்ஜஸ்ட் செய்ய சொன்னார் என ஏகத்துக்குமாக புகார் கொடுத்திருந்தனர். இது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியிருந்தது.
இதனால் சசிகலா புஷ்பா தமிழகம் வந்தால் நிச்சயம் கைது செய்யப்படக் கூடும் எனவும் கூறப்பட்டது. இந்த நிலையில் டெல்லி உயர்நீதிமன்றத்தில் சசிகலா புஷ்பா தமக்கு முன்ஜாமீன் வழங்கக் கோரி மனு ஒன்றைத் தாக்கல் செய்துள்ளார்.
அதில் தமது வீட்டில் வேலைபார்த்த பெண்கள் பாலியல் தொல்லை கொடுத்ததாக புகார் கூறப்பட்டதால் முன்ஜாமீன் வழங்க கோரியிருக்கிறார் சசிகலா புஷ்பா.