For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

அண்ணி சந்தானலட்சுமி மரணம்- 5 நாட்கள் பரோல் கேட்ட சசிகலா மனு நிராகரிப்பு!

அண்ணி சந்தானலட்சுமி இறுதி சடங்கில் பங்கேற்க 5 நாட்கள் பரோல் கேட்ட சசிகலா மனு நிராகரிக்கப்பட்டுவிட்டது.

By Mathi
Google Oneindia Tamil News

பெங்களூரு: அண்ணி சந்தானலட்சுமி இறுதிச் சடங்கில் பங்கேற்க 5 நாட்கள் பரோல் கேட்ட சசிகலாவின் மனு நிராகரிக்கப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.

சசிகலா, திவாகரன் ஆகியோரது அண்ணியும் டிடிவி தினகரனின் மாமியாருமான சந்தானலட்சுமி உடல்நலக் குறைவால் காலமானார். சந்தானலட்சுமி இறுதி சடங்கில் எதிரும் புதிருமாக இருந்த தினகரன், திவாகரன் ஆகியோர் மகிழ்ச்சியாக ஒன்றிணைந்தனர்.

Sasikala's application for parole rejected

சசிகலாவும் அண்ணியின் இறுதி சடங்கில் பங்கேற்க 5 நாட்கள் பரோல் கேட்டு விண்ணப்பித்திருந்தார். ஆனால் பெங்களூரு சிறைச்சாலையையே கூவத்தூர் ரிசார்ட்டாக மாற்றிய சசிகலாவுக்கு அனுமதி மறுக்கப்பட்டுவிட்டது.

சசிகலா தமது குடும்பத்தில் மிகவும் நேசித்த மகாதேவன், சந்தானலட்சுமி ஆகியோர் அடுத்தடுத்து மரணமடைந்தனர். இந்த இருவரது இறுதி சடங்கிலும் பங்கேற்க அவருக்கு அனுமதி மறுக்கப்பட்டுவிட்டது.

இதனால் சிறையில் சசிகலா கண்ணீர்விட்டு கதறி அழுததாக கூறப்படுகிறது.

English summary
Sasikala's application for parole was reportedly rejected by Bengaluru's Parappana Agrahara jail authorities.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X