காவிரி: வரைவு அறிக்கை வழக்கை ஒத்தி வைக்க வேண்டும்- மத்திய அரசு கோரிக்கை- சுப்ரீம்கோர்ட் நிராகரிப்பு!
Recommended Video
டெல்லி: காவிரி மேலாண்மை வாரியம் குறித்த வரைவு அறிக்கை இன்னும் தயாராகவில்லை; ஆகையால் வழக்கை 2 வாரங்களுக்கு ஒத்திவைக்க வேண்டும் என உச்சநீதிமன்றத்தில் மத்திய அரசு கூறியது. மத்திய அரசின் கோரிக்கையை உச்சநீதிமன்றம் நிராகரித்துவிட்டது.
காவிரி மேலாண்மை வாரியம் குறித்த வரைவு அறிக்கையை நாளைக்குள் தாக்கல் செய்ய உச்சநீதிமன்றம் உத்தரவிட்டது. ஆனால் உச்சநீதிமன்றத்தில் மத்திய அரசு இன்று வரைவு அறிக்கை இன்னும் தயாராகவில்லை.
அதனால் காவிரி வழக்கை 2 வாரங்களுக்கு அதாவது மே 16-ந் தேதி வரை ஒத்திவைக்க வேண்டும் என மத்திய அரசு வலியுறுத்தியது. மத்திய அரசின் இந்த கோரிக்கையை உச்சநீதிமன்றம் நிராகரித்துவிட்டது.
மத்திய அரசின் கோரிக்கை குறித்து நாளை விசாரிக்கப்படும் எனவும் உச்சநீதிமன்றம் தெரிவித்துள்ளது. தற்போதைய நிலையில்ல் காவிரி மேலாண்மை வாரியம் குறித்த வரைவு அறிக்கையை மத்திய அரசு உச்சநீதிமன்றத்தில் நாளை தாக்கல் செய்யாது என்பது தெளிவாகி உள்ளது.