கோவா சட்டசபையில் 16ம் தேதி காலை 11 மணிக்கு நம்பிக்கை வாக்கெடுப்பு
டெல்லி: கோவாவில் பாஜக ஆட்சி அமைப்பதை எதிர்த்து காங்கிரஸ் கட்சி தொடர்ந்த வழக்கை இன்று அவசர வழக்காக எடுத்து விசாரித்த சுப்ரீம் கோர்ட் சட்டசபையில் நம்பிக்கை வாக்கெடுப்பை நடத்த அதிரடியாக உத்தரவிட்டுள்ளது.
-கோவா அமைச்சரவையில் 2 சுயேச்சைகளுக்கும் வாய்ப்பு
-கோவா ஃபார்வேர்ட் கட்சியை சேர்ந்த 2 எம்.எல்.ஏக்களுக்கும் கேபினெட்டில் இடம்
-பாஜகவை சேர்ந்த 2 எம்.எல்.ஏக்களும் அமைச்சர்களாக பொறுப்பேற்கிறார்கள்
-கோவா சட்டசபையில் 16ம் தேதி காலை 11 மணிக்கு நம்பிக்கை வாக்கெடுப்பு நடக்கிறது
-கோவா சட்டசபையில் மார்ச் 16ல் நம்பிக்கை வாக்கெடுப்பு: சுப்ரீம்கோர்ட்
-வாக்கெடுப்பில் வெல்லும் கட்சி ஆட்சியமைக்கும்- சுப்ரீம் கோர்ட்
-தற்காலிக சபாநாயகரை சுப்ரீம் கோர்ட்டே நியமிக்கும் - தலைமை நீதிபதி
-மனோகர் பாரிக்கர் கோவா முதல்வராக இன்று பதவியேற்பதில் சிக்கல்
-கோவா பேரவையில் நம்பிக்கை வாக்கெடுப்பு நடத்த சுப்ரீம் கோர்ட் உத்தரவு
-பாரிகர் பதவியேற்புக்கு முன்பே நம்பிக்கை வாக்கெடுப்பை நடத்த முடியுமா - சுப்ரீம் கோர்ட் கேள்வி
-நம்பிக்கை வாக்கெடுப்பை நாளையே நடத்தலாமே? - காங்.
-எதற்காக 15 நாள் கால அவகாசம் - காங். கேள்வி
-கோவா சட்டசபையில் காங்கிரஸ் தனிப்பெரும் கட்சி- வழக்கறிஞர் அபிஷேக் சிங்வி வாதம்
ஆளுநர் பாஜகவுக்கு அழைப்பு விடுத்ததில் தவறில்லை - ஹரீஷ் சால்வே வாதம்
பாரிக்கருக்கு சட்டசபையில் பெரும்பான்மை பலம் உள்ளது - சால்வே
காங்கிரஸையே ஆளுநர் முதலில அழைத்திருக்க வேண்டும் - சிங்வி
யாருக்கு மெஜாரிட்டி உள்ளது என்பதை ஆளுநர் முடிவு செய்யலாம் - தலைமை நீதிபதி
எண்ணிக்கையை விட அரசியல் நிலைத்தன்மையே முக்கியம் - தலைமை நீதிபதி
ஆட்சியமைத்து விட்டு பெரும்பான்மையை நிரூபிக்க முடியாமல் போனால் அது மோசம் - தலைமை நீதிபதி
காங்கிரஸிடம் போதிய எம்.எல்.ஏக்கள் உள்ளனரா - சிங்வியிடம் நீதிபதி தருண் கோகாய் கேள்வி
கோவாவில் பாஜக ஆட்சியமைக்க எதிர்த்த வழக்கில் விசாரணை
உச்சநீதிமன்றத்தில் விசாரணை தொடக்கம்
எந்த கட்சியும் பெரும்பான்மை பெறாத நிலையில் ஆளுநர் முடிவெடுக்கலாம்-நீதிபதி
கோவா சட்டசபைத் தேர்தலில் தனிப் பெரும் கட்சி காங்கிரஸ்
ஆனால் சுயேச்சைகளை பாஜக வளைத்து ஆட்சியமைக்கிறது
இதை தடுத்து நிறுத்தக் கோரி சுப்ரீம் கோர்ட்டில் காங்கிரஸ் வழக்கு
இன்று மனோகர் பாரிக்கர் தலைமையிலான அரசு பதவியேற்கிறது
தடுத்து நிறுத்தக் கோரி காங்கிரஸ் வழக்கு
அவசர வழக்காக சுப்ரீம் கோர்ட் விசாரிக்கிறது
தலைமைச் செயலாளர் ஜே.எஸ்.கெஹர் தலைமையிலான பெஞ்ச் விசாரிக்கிறது
ஹோலி விடுமுறையாக இருந்தாலும் விசாரணை நடைபெறுகிறது
மாலை 5 மணிக்கு பாரிக்கர் பதவியேற்பு விழா நடைபெறவுள்ளது
நடைபெறுமா தடை விதிக்கப்படுமா என்று பரபரப்பு