For Daily Alerts
Just In
முல்லைப் பெரியாறு அணை பார்க்கிங் விவகாரம் : டிசம்பர் 11-ல் இரு மாநில முதல்வர்கள் பேச்சுவார்த்தை
முல்லைப் பெரியாறு அணையில் பார்க்கிங் கட்டுமான விவகாரம் குறித்து இரு மாநில முதல்வர்களும் பேச்சுவார்த்தை நடத்த உள்ளனர்.
டெல்லி: முல்லைப் பெரியாறு அணை குறித்த வழக்கில் தமிழக - கேரள முதல்வர்கள் டிசம்பர் 11ம் தேதி பேச்சுவார்த்தை நடத்த உள்ளதாக தமிழக அரசு உச்சநீதிமன்றத்தில் தெரிவித்து உள்ளது.
முல்லைப் பெரியாறு அணையில் கேரள அரசு வாகன நிறுத்துமிடம் கட்டுவதை எதிர்த்து தமிழக அரசு உச்சநீதிமன்றத்தில் வழக்குத் தொடர்ந்து இருந்தது. இந்த வழக்கை விசாரித்த உச்சநீதிமன்றம், இரு மாநில முதல்வர்கள் பேசி முடிவெடுக்குமாறு அறிவுறுத்தி இருந்தது.
இந்நிலையில், இந்த வழக்கு இன்று மீண்டும் விசாரணைக்கு வந்தது. அப்போது, டிசம்பர் 11ம் தேதி தமிழக மற்றும் கேரளா முதல்வர்கள் இதுகுறித்து பேச்சுவார்த்தை நடத்த உள்ளதாக தமிழக அரசு வழக்கறிஞர் பதிலளித்து உள்ளார்.
Comments
supreme court orders talk kerala tamilnadu cm mullai periyar dam jaffna முல்லை பெரியாறு அணை கேரளா தமிழ்நாடு உச்சநீதிமன்றம் பேச்சுவார்த்தை முடிவு
English summary
Kerala Plans to Built carparking on Mullai periyar and Tamilnadu opposing it : SC orders to Negotiate talks between state CM's
Story first published: Monday, November 27, 2017, 15:57 [IST]