For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

கழிப்பறை செல்ல கையில் வாளியுடன் ஆசிரியர்கள் துணையுடன் தினமும் 4கிமீ நடக்கும் பள்ளி மாணவிகள்!

தண்ணீர் பஞ்சத்தால் கழிப்பறை செல்ல மத்தியபிரதேசத்தில் பள்ளி மாணவிகள் பெரும் அவதிப்பட்டு வருகின்றனர்.

Google Oneindia Tamil News

Recommended Video

    தண்ணீர் பஞ்சத்தால் தினமும் கழிப்பறை செல்ல 4 கி.மீ. நடக்கும் மாணவிகள்- வீடியோ

    போபால் : தண்ணீர் பஞ்சம் காரணமாக மத்தியபிரதேசத்தில் அரசு பள்ளி மாணவிகள் தினமும் கழிப்பறைக்காக நான்கு கிலோ மீட்டர் நடந்து செல்லும் அவல நிலை காணப்படுகிறது.

    மத்தியபிரதேச மாநிலம் தமோ மாவட்டத்தில் உள்ள அரசு விடுதி ஒன்றில் தங்கியுள்ள மாணவிகள் ஆண்டுதோறும் கோடை காலத்தில் கழிப்பறை செல்வதற்கே பெரும் அவதிக்கு ஆளாகி வருகின்றனர். தண்ணீர் பஞ்சம் காரணமாக தினமும் சுமார் 4 கிமீ தொலைவு நடந்து சென்று கழிப்பறையை அவர்கள் பயன்படுத்தி வருகின்றனர். ஆசிரியர்கள் மற்றும் விடுதி ஊழியர்கள் துணையுடன் அவர்கள் கையில் வாளியுடன் நடந்து செல்லும் காட்சி பரிதாபமாக இருக்கின்றது.

    School Girls Walk 4 Km For Toilet

    இதுகுறித்து, சம்பந்தப்பட்ட அந்த விடுதியின் காப்பாளர் கூறுகையில்,' கோடை காலத்தில், தண்ணீர் பஞ்சம் இருப்பது வழக்கம் தான். எப்போதும் டேங்கர் லாரியில் தண்ணீர் கொண்டு வந்து விநியோகிப்பர். ஆனால், இந்த ஆண்டு அதுவும் இல்லை. இது குறித்து கலெக்டரிடம் புகார் அளித்தும், இதுவரை நடவடிக்கை இல்லை’ என வருத்தம் தெரிவித்துள்ளார்.

    அப்பகுதியில் இரண்டு போர்வெல்கள் உள்ளன. ஆனபோதும், அவை கோடை காலத்தில் வறண்டு விடுவதால் அம்மாணவிகள் தண்ணீர் இன்றி அவதிப்பட்டு வருகின்றனர்.

    English summary
    For the basic need of using a toilet, young girls from Madhya Pradesh's Damoh district, 250 km from state capital Bhopal, have to walk daily for about four kilometres. With buckets in their hand, they travel the distance with their school teacher and other staff workers. The culprit being acute water crisis in their area.
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X