For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

இயல்பு நிலைக்கு திரும்பும் ஜம்மு காஷ்மீர்.. பள்ளி, கல்லூரிகள் திங்கள்கிழமை மீண்டும் திறப்பு

Google Oneindia Tamil News

ஸ்ரீநகர்: காஷ்மீர் பள்ளத்தாக்கில் உள்ள பள்ளிகள் மற்றும் கல்லூரிகள் வரும், திங்கள்கிழமை முதல் கட்டமாக மீண்டும் திறக்கப்படும் என்று ஜம்மு-காஷ்மீர் தலைமைச் செயலாளர் பி.வி.ஆர் சுப்பிரமணியம் இன்று தெரிவித்தார்.

ஜம்மு-காஷ்மீருக்கான, சிறப்பு அந்தஸ்தை ரத்து செய்த பின்னர், அங்கு கடுமையான கட்டுப்பாடுகளை அரசு விதித்துள்ளது. படிப்படியாக இப்போது அந்த கட்டுப்பாடுகளை அரசு, தளர்த்த ஆரம்பித்துள்ளது.

Schools, Colleges in Jammu Kashmir to reopen from Monday

இதன் ஒரு பகுதியாக, பொதுப் போக்குவரத்து விரைவில் செயல்படும் என்றும், வெள்ளிக்கிழமை முதல் அரசு அலுவலகங்கள் செயல்படுவதாகவும் தலைமைச் செயலாளர் சுப்பிரமணியம் கூறியுள்ளார்.

ஸ்ரீநகரின் பெரும்பாலான பகுதிகளில் லேன்ட்லைன் தொலைபேசி இணைப்புகள் சனிக்கிழமை முதல் செயல்பட ஆரம்பிக்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

கிறிஸ்துவ கல்வி நிறுவனங்களில் மாணவிகள் பாதுகாப்பாக உள்ளனரா? சென்னை ஹைகோர்ட் கேள்வி! கிறிஸ்துவ கல்வி நிறுவனங்களில் மாணவிகள் பாதுகாப்பாக உள்ளனரா? சென்னை ஹைகோர்ட் கேள்வி!

பிற பகுதிகளில் தகவல்தொடர்பு இருட்டடிப்பு இன்னும் சில நாட்களுக்கு தொடர வாய்ப்புள்ளது, ஆனால் லேண்ட்லைன் இணைப்புகள் ஒரு கட்டமாக செயல்பட முடியும்.

Schools, Colleges in Jammu Kashmir to reopen from Monday

இதற்கிடையில், ஆளுநர் சத்ய பால் மாலிக், ஸ்ரீநகரில் உள்ள குடிமை செயலகம் மற்றும் அரசு அலுவலகங்கள் இன்று முதல் மீண்டும் செயல்படும் என்று உத்தரவிட்டுள்ளார்.

ஆளுநர் மாலிக் ஜம்மு காஷ்மீரின் பாதுகாப்பு சூழ்நிலையை ஆய்வு செய்த பின்னர், இந்த முடிவுக்கு வந்துள்ளார். குறிப்பாக, மாநிலம் முழுவதும் அமைதியான முறையில் நடைபெற்ற சுதந்திர தின கொண்டாட்டங்களை உறுதிசெய்த பிறகு கட்டுப்பாடுகளை தளர்த்த முன்வந்துள்ளார்.

வெள்ளிக்கிழமை தொழுகையின் போது பாகிஸ்தானின் தூண்டுதலால் கல்வீச்சு சம்பவங்கள் ஏதேனும் நடக்குமோ என்ற அச்சம் இருந்தது. ஆனால் இன்று அப்படி எதுவும் நடைபெறவில்லை. எனவே கெடுபிடிகளை தளர்த்திவிடலாம் என்ற முடிவுக்கு அரசு வந்துள்ளதாக தெரிகிறது.

கடந்த இரண்டு வாரங்களாக பள்ளிகள் மூடப்பட்டுள்ள நிலையில், கடைகள் மற்றும் பிற வணிக நிறுவனங்களும் ஆகஸ்ட் 5 முதல் மூடப்பட்டுள்ளன என்பது குறிப்பிடத்க்கது.

English summary
Schools and colleges in the Kashmir Valley will reopen starting Monday, the 15th day of lockdown in the Valley, Jammu and Kashmir Chief Secretary BVR Subrahmanyam said on Friday.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X