குடியுரிமை திருத்த மசோதாவுக்கு எதிராக சென்னை, பெங்களூருவில் எஸ்.டி.பி.ஐ போராட்டம்
Recommended Video
சென்னை/பெங்களூரு: மத்திய அரசின் குடியுரிமை சட்ட திருத்த மசோதாவுக்கு எதிராக சென்னை, பெங்களூரு உள்ளிட்ட பல இடங்களில் எஸ்.டி.பி.ஐ. கட்சியினர் போராட்டம் நடத்தினர். அப்போது குடியுரிமை திருத்த மசோதாவின் நகல்கள் எரிக்கப்பட்டன.
லோக்சபாவில் குடியுரிமை திருத்த மசோதா நிறைவேற்றப்பட்டுள்ளது. ராஜ்யசபாவில் இம்மசோதா நாளை தாக்கல் செய்யப்படுகிறது.
குடியுரிமை திருத்த மசோதாவுக்கு எதிராக வடகிழக்கு மாநிலங்களில் பெரும் கிளர்ச்சி நடைபெற்று வருகிறது. வடகிழக்கு மாநிலங்களில் போராட்டம் உச்சகட்டமாக நடைபெற்று வருகின்றன.
Tamil Nadu: Social Democratic Party of India holds protest in Chennai against #CitizenshipAmendmentBill2019 pic.twitter.com/2aBanMQs2w
— ANI (@ANI) December 10, 2019
இந்நிலையில் சென்னை, பெங்களூரு உள்ளிட்ட இடங்களில் எஸ்.டி.பி.ஐ. கட்சியினர் இன்று மாலை இம்மசோதாவுக்கு எதிராக போராட்டங்களை நடத்தினர். அப்போது மத்திய அரசுக்கு எதிராக முழக்கங்களை அவர்கள் எழுப்பினர்.
மேலும் குடியுரிமை திருத்த மசோதாவின் நகலையும் தீ வைத்து எரித்தனர்.
Karnataka: Social Democratic Party of India-Karnataka holds protest against #CitizenshipAmendmentBill2019, in Bengaluru. pic.twitter.com/G94ah8a8jh
— ANI (@ANI) December 10, 2019