For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

குடியரசு தினவிழாவை சீர்குலை முயற்சி... ஸ்ரீநகரில் 2 தீவிரவாதிகள் சுட்டுக்கொலை

Google Oneindia Tamil News

ரீநகர் : ஜம்மு - காஷ்மீர் மாநிலம் ஸ்ரீநகரில் 2 தீவிரவாதிகளை பாதுகாப்பு படையினர் சுட்டுக்கொன்றனர்.

70 வது குடியரசு தினம் இன்று கோலாகலமாக கொண்டாடப்பட்டு வருகிறது. இதனையொட்டி நாடு முழுவதும் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது.

Security forces neutralise two terrorists during encounter in Khonmoh, Srinagar

முக்கிய நகரங்களில் ரோந்து பணி தீவிரப்படுத்தப்பட்டுள்ளது. இந்தநிலையில், ஸ்ரீநகரின் கொன்மாக் பகுதியில் குடியரசு தின விழா நிகழ்ச்சிக்கு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.

இந்த நிகழ்ச்சியை சீர்குலைக்கும் முயற்சியுடன் தீவிரவாதிகள் பதுங்கி இருப்பதாக கிடைத்த ரகசிய தகவலை அடுத்து, அப்பகுதியை சுற்றிவளைத்த பாதுகாப்பு படையினர் மீது தீவிரவாதிகள் துப்பாக்கிச் சூடு நடத்தினர்.

இதற்கு பதிலடி தாக்குதல் நடத்தியதில் இரண்டு தீவிரவாதிகள் சுட்டுக் கொல்லப்பட்டனர். இதனால், தீவிரவாதிகளின் சதி திட்டம் முறியடிக்கப்பட்டுள்ளது. பாதுகாப்பு படையினர் தொடர்ந்து ரோந்து பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.

English summary
Encounter underway between terrorists and security forces in Khonmoh, Srinagar
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X