For Quick Alerts
For Daily Alerts
Just In
வெடிகுண்டு மிரட்டல் எதிரொலி.. நாடு முழுவதும் விமான நிலையங்களுக்கு பாதுகாப்பு அதிகரிப்பு
டெல்லி: டேராடூன் விமான நிலையத்திற்கு பயங்கரவாதிகள் வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டுள்ளதால் அனைத்து விமான நிலையங்களிலும் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது.
விமான நிலையங்கள் மீது தாக்குதல் நடத்தபோவதாக பயங்கரவாதிகளிடம் இருந்து மிரட்டல் விடுக்கப்பட்டதை தொடர்ந்து நாட்டில் உள்ள அனைத்து விமான நிலையங்களிலும் பாதுகாப்பு பலத்தப்பட்டுள்ளது.
அனைத்து விமானங்களும் முழு சோதனையிட்ட பிறகே வருகிறது. டேராடூன் விமான நிலையத்திற்கு வரும் அனைத்து வாகனங்களையும் சோதனை செய்யப்பட்ட பின்னரே விமான நிலையத்திற்குள் நுழைய அனுமதிக்கப்படுகிறது. குறிப்பாக வட மாநிலங்களில் உள்ள விமான நிலையங்களில் பாதுகாப்பு அதிகரிக்கப்பட்டுள்ளதாக உத்தரகாண்ட் டிஜிபி எம்.ஏ.கணபதி தெரிவித்துள்ளார்.
Comments
English summary
Terror alert issued for all Air force stations & air bases in the country, especially in North India: Uttarakhand DGP MA Ganpati
Story first published: Sunday, September 18, 2016, 2:56 [IST]