ஜம்மு காஷ்மீர் மாவட்ட கவுன்சில் தேர்தல் தொகுதி பங்கீடு- மெகபூபா கட்சி மூத்த தலைவர் திடீர் விலகல்
ஶ்ரீநகர்: ஜம்மு காஷ்மீர் மாவட்ட கவுன்சில் தேர்தல் தொகுதி பங்கீடு விவகாரத்தில் அதிருப்தி ஏற்பட்டதால் மெகபூபா முப்தியின் மக்கள் ஜனநாயக கட்சியின் மூத்த தலைவர் முசாஃபார் ஹூசைன் பெய்க் கட்சியில் இருந்து விலகுவதாக அறிவித்துள்ளார்.
ஜம்மு காஷ்மீர் மாவட்ட வளர்ச்சி கவுன்சில் தேர்தல் 2 கட்டங்களாக நவம்பர் 28, டிசம்பர் 19 ஆகிய தேதிகளில் நடைபெறுகிறது. அனைத்து வாக்குகளும் டிசம்பர் 22-ந் தேதி எண்ணப்பட்டு முடிவுகள் அறிவிக்கப்படும்.
இந்த தேர்தலில் குப்கர் பிரகடனத்துக்கான மக்கள் கூட்டணியில் இடம்பெற்றுள்ள கட்சிகள் ஒருங்கிணைந்து போட்டியிடுகின்றன. இக் கூட்டணியில் ஃபரூக் அப்துல்லாவின் தேசிய மாநாட்டு கட்சி, மெகபூபா முப்தியின் மக்கள் ஜனநாயக கட்சி, இடதுசாரிகள் உள்ளிட்டவை இடம் பெற்றுள்ளன.
இக் கட்சிகளிடையே மாவட்ட கவுன்சில் தேர்தலுக்கான தொகுதி பங்கீடு நடைபெற்று வருகிறது. ஆனால் தொகுதிப் பங்கீடு தொடர்பாக தம்முடன் எந்த ஆலோசனையும் நடத்தவில்லை என்பதால் மக்கள் ஜனநாயக கட்சியின் மூத்த தலைவர் முசாஃபார் ஹூசைன் பெய்க் அக்கட்சியில் இருந்து ராஜினாமா செய்துள்ளார்.
குதித்து குதித்து கிறங்க வைத்த கேபி.. எதிர்பாராத ட்விஸ்ட் தந்த பிக்பாஸ்.. குழம்பும் ரசிகர்கள்..!
மக்கள் ஜனநாயகக் கட்சியின் நிறுவனத் தலைவர்களில் ஒருவர் முசாஃபார் ஹூசைன் பெய்க். இது மெகபூபா முப்திக்கு மிகப் பெரிய பின்னடைவாக கருதப்படுகிறது.