For Daily Alerts
Just In
இந்திய பங்குச் சந்தைகள் 3-வது நாளாக தொடர் சரிவு
மும்பை பங்கு சந்தை மற்றும் நிஃப்டி 3-வது நாளாக சரிவை எதிர்கொண்டுள்ளன.
மும்பை: இந்திய பங்குச் சந்தைகள் இன்று 3-வது நாளாக சரிவுடன் வர்த்தகத்தைத் தொடங்கியது.
ரூபாய் நோட்டுகள் செல்லாது அறிவிப்பு மற்றும் அமெரிக்க அதிபர் தேர்தல் முடிவுகள் இந்திய பங்குச் சந்தைகளில் தொடர்ந்து தாக்கத்தை ஏற்படுத்தி வருகிறது. கடந்த 2 நாட்களாக இந்திய பங்குச் சந்தைகள் சரிவை எதிர்கொண்டிருந்தன.
இன்று 3-வது நாளாக காலையில் 400 புள்ளிகள் சரிவுடன் மும்பை பங்குச் சந்தை வர்த்தகத்தை தொடங்கியது. வங்கிகளின் பங்குகள் ஏற்றத்துடன் உள்ளன.
தேசிய பங்குச் சந்தையான நிஃப்டியும் சரிவுடனே வர்த்தகத்தைத் தொடங்கியுள்ளது.
Comments
English summary
As the market opened on Friday, Sensex and Nifty started falling.
Story first published: Friday, November 11, 2016, 10:18 [IST]