For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

ஹைதராபாத்தில் 7 வயது சிறுமியை குத்திக் கொன்ற சைக்கோ பி.இ. மாணவன்

By Siva
Google Oneindia Tamil News

ஹைதராபாத்: செகந்திராபாத் ரயில் நிலையத்தில் 7 வயது சிறுமியை சைக்கோ ஒருவன் கத்தியால் குத்திக் கொலை செய்து விட்டான்.

ஆந்திர மாநிலம் செகந்திராபாத் ரயில் நிலையத்தில் பிரியதர்ஷினி(10) என்ற சிறுமி தனது தந்தை ஸ்ரீனிவாஸ் மற்றும் பாட்டியுடன் மகராஷ்டிரா மாநிலத்தில் உள்ள சோலாபூருக்கு செல்லும் ரயிலுக்காக பிளாட்பாரம் 10ல் நேற்று காத்துக் கொண்டிருந்தார். அவர்கள் சோலாபூரில் நடக்கும் திருமணம் ஒன்றுக்கு செல்ல இருந்தனர். அப்போது அவரது தந்தை டிக்கெட் வாங்கச் சென்றுவிட்டார். அந்த நேரம் சித்தூரைச் சேர்ந்த கரண் குமார்(21) என்ற சைக்கோ அங்கு வந்து சிறுமியை கத்தியால் குத்தினான்.

இதை பார்த்த சக பயணிகள் கரணை பிடித்து அடித்து நொறுக்கி போலீசில் ஒப்படைத்தனர். படுகாயம் அடைந்த சிறுமி அருகில் உள்ள அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அங்கு சிறுமி சிகிச்சை பலனின்றி உயிர் இழந்தார்.

இதற்கிடையே கரண் குமார் புத்தூரில் உள்ள தனியார் பொறியியல் கல்லூரியில் படித்து வருவது தெரிய வந்தது. போலீஸ் விசாரணையில் கரண் கூறுகையில், எனது காதலிக்கு ஹெச்.ஐ.வி. பாதிப்பு உள்ளது. இதனால் என்னை பிறர் கிண்டலடித்தனர். அவமானம் தாங்க முடியாமல் எனது ஊரை விட்டு வெளியேறி ரயிலில் செகந்திராபாத் வந்தேன் என்றான்.

ஆனால் அவன் சிறுமியை எதற்காக கத்தியால் குத்தினான் என்பது குறித்து போலீசார் விசாரித்து வருகின்றனர்.

English summary
A seven-year-old girl was Tuesday stabbed to death by a youth described as a maniac by police at Secunderabad Railway Station.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X