For Daily Alerts
Just In
ஒரு வேளை மட்டுமே உண்டு ரூ.1 லட்சம் வெள்ள நிவாரணமாக தந்த பாலியல் தொழிலாளர்கள்!
மும்பை: சென்னை வெள்ள நிவாரண பணிகளுக்காக மகாராஷ்டிர மாநிலம் அகமதுநகர் மாவட்டத்தைச் சேர்ந்த பாலியல் தொழிலாளர்கள் ரூபாய் 1 லட்சம் வழங்கினர்.
"சினேகாலயா" என்ற தொண்டு நிறுவனம், அகமதுநகரில் நேற்று ஏற்பாடு செய்த நிகழ்ச்சியில், ரூபாய் 1 லட்சத்துக்கான காசோலையை மாவட்ட கலெக்டர் அனில் கவடேவிடம் அவர்கள் வழங்கினர்.
இதுபற்றி "சினேகாலயா" நிறுவனர் கிரிஷ் குல்கர்னி கூறுகையில், "சென்னை வெள்ள பாதிப்பைப் பற்றி கேள்விப்பட்டு, கடந்த 4 நாட்களாக இந்த பெண்கள் மன உளைச்சலில் இருந்தனர்.
மாவட்டத்தில் மொத்தம் உள்ள 3 ஆயிரம் பாலியல் தொழிலாளர்களில் 2 ஆயிரம் பேர், இந்த நிதியில் தங்கள் பங்கை கொடுத்துள்ளனர். மேலும், கடந்த 4 நாட்களாக தினமும் ஒருவேளை மட்டுமே அவர்கள் சாப்பிட்டுள்ளனர்" என்றார்.
Comments
English summary
Maharashtra sex workers were donated 1 lakh to Chennai flood.