செல்போனில் அடுத்தவர் மனைவிக்கு பாலியல் தொல்லை.. கேரள காங். எம்.எல்.ஏ மீது திடுக் புகார்
திருவனந்தபுரம்: செல்போன் மூலம் பாலியல் தொல்லை கொடுத்ததாக கேரளமாநில காங்கிரஸ் எம்.எல்.ஏ. மீது திடுக் புகார் எழுந்துள்ளது.
இது தொடர்பாக கேரள போலீசார் தரப்பில், " கேரள மாநிலம் நெய்யாத்தின்கரா பகுதியில் உள்ள ஒரு மருத்துவமனையில் தூக்கமாத்திரை அதிக அளவில் தின்று மயங்கிய நிலையில் 51 வயது பெண் ஒரு அனுமதிக்கப்பட்டார். அவருக்கு மருத்துவர்கள் சிகிச்சை அளித்தனர்." என்று கூறினார்.
பின்னர் அந்த சம்பவம் தொடர்பாக சிகிச்சையில் இருக்கும் பெண்ணின் கணவர் கூறுகையில் , 'எனது மனைவிக்கு காங்கிரஸ் எம்.எல்.ஏ வின்செண்ட் செல்போன் மூலம் தொடர்ந்து பேசி பாலியல் தொல்லை கொடுத்தார். இதனால் தனது மனைவி தற்கொலைக்கு முயன்றார்' என்று தெரிவித்தார்.
இது தொடர்பாக நேற்று கேரள காவல்துறை வெளியிட்ட ஒரு அறிக்கையில், " இந்த குற்றச்சாட்டு, தொடரபாக விசாரணை நடந்து வருகிறது. மேலும், மாநில தலைமை போலீஸ் அதிகாரி லோக்நாத் பெகரா இது குறித்து கொல்லம் நகர் போலீஸ் கமிஷனர் விரைந்து விசாரணை நடத்த உத்தரவிட்டு உள்ளார்" என்று தெரிவித்துள்ளது.
இந்த புகார் குறித்து காங்கிரஸ் கட்சியின் எம்.எல்.ஏ வின்சன்ட் கூறும் போது," இது ஆதாரமற்ற குற்றசாட்டு. விசாரணையை சந்திக்க தயாராக உள்ளேன்" என்று கூறியுள்ளார்.