'எல்லாமே ஆடுது பிரதர்'... நிலநடுக்கத்தால் "ஷேக்" ஆன ஷேவாக்...!
டெல்லி: டெல்லியை இன்று உலுக்கிய நிலநடுக்கத்தால் மக்கள் பீதியடைந்த நிலையில் பிரபல கிரிக்கெட் வீரர் வீரேந்திர ஷேவாக்கும் இந்த நடுக்கத்திற்குத் தப்பவில்லை.
வட இந்தியாவின் பெரும்பாலான பகுதிகளை இன்று நிலநடுக்கம் உலுக்கி விட்டது. டெல்லியிலும் நிலநடுக்கம் உணரப்பட்டது. நிலநடுக்கத்தை ஷேவாக்கும் உணர்ந்தார். இதுகுறித்து அவர் டிவிட்டில் போட்டுள்ளார்.
Earthquake
— Virender Sehwag (@virendersehwag) October 26, 2015
सब हिल रहा है भाई
— Virender Sehwag (@virendersehwag) October 26, 2015
Sitting outside n having lunch
— Virender Sehwag (@virendersehwag) October 26, 2015
அதில் அவர் கூறுகையில், 'நிலநடுக்கம். எல்லாமே ஆடுது பிரதர்.. வீட்டுக்கு வெளியே வந்து லன்ச் சாப்பிடுகிறேன்' என்று போட்டுள்ளார் ஷேவாக்.
7.5 ரிக்டர் அளவிலான மிகப் பெரிய நிலநடுக்கம் ஆப்கானிஸ்தானை மையமாக வைத்து இன்று ஆட்டம் காட்டி விட்டது. இதன் எதிரொலி டெல்லி, ஸ்ரீநகர் உள்பட வட இந்தியாவில் தெரிந்தது. பல இடங்களில் கட்டடங்கள், வீடுகள் ஆடியுள்ளன. ஒரு நிமிட அளவுக்கு இது நீடித்ததாக கூறப்படுகிறது.
ஜம்மு காஷ்மீர், டெல்லி, பஞ்சாப், உத்தரகாண்ட், ராஜஸ்தான் ஆகிய மாநிலங்களில் மக்கள் நிலநடுக்கத்தை உணர்ந்துள்ளனர்.