For Daily Alerts
Just In
வெளிநாட்டு சந்தைகளில் வெங்காய விற்பனை...: விவசாயிகளுக்கு உறுதியளித்த சரத்பவார்
மும்பை: வெளிநாட்டு சந்தைகளில் வெங்காய விற்பனைக்கு முயற்சி செய்வதாக மத்திய விவசாய அமைச்சர் சரத்பவார் நாசிக் விவசாயிகளிடம் உறுதி தெரிவித்துள்ளார்.
மராட்டிய மாநிலம் நாசிக் மாவட்டம் மன்மத்தில் நடந்த நிகழ்ச்சியில் மத்திய விவசாய அமைச்சர் சரத்பவார் கலந்து கொண்டார். அப்போது அவர் பேசியதாவது:-
இந்த ஆண்டு நாசிக் மாவட்டத்தில் அதிக அளவில் வெங்காயம் விளைவிக்கப்படுகிறது. இதனால் வெங்காய விலை வீழ்ச்சி காரணமாக விவசாயிகள் பாதிக்கப்படுவார்கள். இதனை கருத்தில் கொண்டு வெங்காயத்தை வெளிநாட்டு சந்தைகளில் விற்பனை செய்வதற்கான முயற்சிகள் மேற்கொள்ளப்படும்.
மேலும் உள்ளூர் விவசாயிகளின் பிரச்சினைகளை சம்பந்தப்பட்ட அதிகாரிகள் மற்றும் சம்பந்தப்பட்ட மந்திரிகளிடம் எடுத்து சென்று தீர்வு காண்பேன்' என்றார்.
Comments
English summary
Union Agriculture Minister Sharad Pawar said that in view of the high production of onion in the district this season, he would make efforts to make the global market accessible for the local farmers.
Story first published: Thursday, December 26, 2013, 13:28 [IST]