For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

சசிதரூருக்கு மனநிலை சரியில்லை... அவரை பாகிஸ்தானுக்கு அனுப்புங்க.. சுப்பிரமணிய சுவாமி

சசிதரூருக்கு மனநிலை சரியில்லை என்பதால் அவரை பாகிஸ்தானுக்கு அனுப்ப வேண்டும் என்று சுப்பிரமணியன் சுவாமி தெரிவித்தார்.

By Lakshmi Priya
Google Oneindia Tamil News

டெல்லி: சசிதரூருக்கு மனநிலை சரியில்லை. அவருக்கு மோடி உதவி செய்து மனநல மருத்துவமனைக்கு அனுப்ப வேண்டும் என்று பாஜக மூத்த தலைவர் சுப்பிரமணியன் சுவாமி தெரிவித்தார்.

"2019-ஆம் ஆண்டு மக்களவை தேர்தலில் பாஜக ஆட்சிக்கு வந்தால் இந்தியா இந்து பாகிஸ்தானாகிவிடும். பாஜக இந்திய அரசியலமைப்பு சட்டத்தை கிழித்து எறிந்துவிட்டு தாங்களாகவே சொந்தமாக விதிகளை உருவாக்கும்" என்று காங்கிரஸ் மூத்த தலைவர் சசிதரூர் கூறியிருந்தார்.

Shashi Tharoor lost his mental balance, says Subramanian Swamy

இதற்கு பதிலடி கொடுக்கும் வகையில் பாஜக சுப்பிரமணியன் சுவாமி கூறுகையில் காங்கிரஸுக்கு முஸ்லிம் சமூகத்தினர் ஆதரவாக இல்லை. இந்து பாகிஸ்தானாகிவிடும் என்று சசி தரூர் தெரிவித்த கருத்துக்கு ராகுல் காந்தி விளக்கமளிக்க வேண்டும்.

இந்து பாகிஸ்தான் என்றவுடன் எனக்கு ஆச்சரியமாகிவிட்டது. நான் ஏன் இந்துவாக இருக்க வேண்டும் என்ற புத்தகத்தை அண்மையில் சசிதரூர் வெளியிட்டார். பாகிஸ்தான் பத்திரிகையாளர் மெஹர் தராருடன் சசிதரூருக்கு உறவு இருக்கிறது. அவருக்காகத்தான் சுனந்தாவுக்கு தரூர் துன்பத்தை கொடுத்தார்.

இந்திய பிரதமர் மோடியை பதவியில் இருந்து நீக்க தரூர் பாகிஸ்தானிடம் உதவி கோரியதிலிருந்தே தரூருக்கு மனநிலை சரியில்லை என்பது தெரிகிறது. இந்து பாகிஸ்தான் என்று ஒரு எம்.பி. கூறுவதா. சசிதரூரின் கருத்துக்கு காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி மன்னிப்பு கேட்க வேண்டும் என்றும் சுவாமி கூறினார்.

English summary
BJP leader Subramanian Swamy lashed out at the veteran Congress leader Shashi Tharoor calling him mentally unstable.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X