For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

'அடடே'- மோடி வெளிநாட்டு பயணத்தால் நாட்டின் மதிப்பு உயரும்.. சசி தரூர் மீண்டும் 'ஆஹோ ஓஹோ' புகழாரம்!

By Mathi
Google Oneindia Tamil News

டெல்லி: பிரதமர் மோடியின் வெளிநாட்டு பயணத்தால் நாட்டின் மதிப்பு உயரும் என்று முன்னாள் மத்திய அமைச்சரும் காங்கிரஸ் மூத்த தலைவர்களில் ஒருவருமான சசி தரூர் மீண்டும் பாராட்டுப் பத்திரம் வாசித்துள்ளார்.

பிரதமர் மோடி வெளிநாடுகளில் சுற்றுப்பயணம் செய்வதையும் காங்கிரஸ் கட்சி விமர்சனம் செய்து வருகிறது. இந்த நிலையில் அவரது வெளிநாட்டு பயணத்தை சசிதரூர் வரவேற்றுள்ளார்.

Shashi Tharoor praises Narendra Modi again

இது குறித்து சசிதரூர் கூறியதாவது:

பிரதமர் மோடி கடந்த ஒரு ஆண்டில் 24 நாடுகளுக்கு பயணம் செய்துள்ளார். இதை அவரது தனிப்பட்ட பயணம் என்று கருதாமல் நாட்டின் நலனுக்கான பயணமாக பார்க்க வேண்டும்.

மோடியின் இந்த வெளிநாட்டு பயணத்தின் மூலம் நல்லது நடக்கும். நாட்டின் மீது உள்ள மதிப்பை மேலும் உயர்த்தும் என்றே நான் கருதுகிறேன்.

இவ்வாறு சசி தரூர் கூறினார்.

பிரதமர் மோடியின் தூய்மை இந்தியா திட்டத்தையும் யோகா தினத்தையயும் சசிதரூர் ஆதரித்து கருத்து தெரிவித்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

English summary
Congress leader Shashi Tharoor once again praised Prime Minister Narendra Modi on Friday, saying he leaves a “positive impression” during his foreign visits and that he does a “right thing” in whichever country he travels to.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X