For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

சுனந்தா கொலை வழக்கு: குழாயடி சண்டைபோடும் சசி தரூர், சு.சாமி

By Siva
Google Oneindia Tamil News

டெல்லி: சுனந்தா புஷ்கர் கொலை தொடர்பாக பாஜக தலைவர் சுப்பிரமணியன் சாமிக்கும், முன்னாள் மத்திய அமைச்சர் சசி தரூருக்கும் இடையே வாய்ச்சண்டை ஏற்பட்டுள்ளது.

முன்னாள் மத்திய அமைச்சர் சசி தரூரின் மனைவி சுனந்தா புஷ்கர் கடந்த ஆண்டு ஜனவரி மாதம் 17ம் தேதி டெல்லியில் உள்ள லீலா பேலஸ் ஹோட்டலில் பிணமாகக் கிடந்தது கண்டுபிடிக்கப்பட்டது. இந்நிலையில் சுனந்தா விஷம் வைத்து கொலை செய்யப்பட்டுள்ளதாக அண்மையில் டெல்லி போலீஸ் கமிஷனர் தெரிவித்தார்.

இந்த விவகாரம் தொடர்பாக பாஜக தலைவர் சுப்பிரமணியன் சாமிக்கும், சசி தரூக்கும் இடையே வாய்ச்சண்டை ஏற்பட்டுள்ளது.

சாமி

சாமி

சுனந்தா கொலை செய்யப்பட்டதாக போலீசார் தற்போது தான் தெரிவித்துள்ளனர். ஆனால் அவர் இறந்த 5வது வாரத்திலேயே சுனந்தாவின் மரணம் கொலையே என்றவர் சாமி.

தரூர்

தரூர்

சாமிக்கு கொலைகாரர் யார் என்று தெரிந்தால் போலீசாரிடம் தெரிவிக்க வேண்டியது தானே என தரூர் செய்தியாளர்களிடம் தெரிவித்துள்ளார்.

போலீஸ்

போலீஸ்

சுனந்தாவை கொலை செய்தது யார் என்று எனக்கு தெரியும் என நான் கூறியதே இல்லை. ஆனால் சசி தரூருக்கு கொலைகாரர் யார் என தெரியும் என்றே கூறினேன் என சாமி தெரிவித்துள்ளார்.

நாடகம்

நாடகம்

சசி தரூரை போலீசார் விசாரிக்க வேண்டும். விசாரணையில் அவர் பொய் கூறினால் அவரை கைது செய்ய வேண்டும். அவர் சுனந்தாவின் கொலையை இயற்கை மரணம் போன்று காட்ட முயற்சி செய்கிறார் என்றார் சாமி.

English summary
Verbal slugfest is going on between BJP leader Subramanian Swamy and former central minister Shashi Tharoor over Sunanda's death mystery.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X