அயோத்தியில் ராமர் கோவில் கட்டும் தேதியை மத்திய அரசு அறிவிக்க வேண்டும் - நெருக்கடி கொடுக்கும் சிவசேனா
மும்பை: அயோத்தியில் ராமர் கோவில் கட்டுவதற்காக தேதியை மத்திய அரசு உடனே அறிவிக்க வேண்டும் என்று பா.ஜ.க. தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணியில் இடம்பெற்றுள்ள சிவசேனா நெருக்கடி கொடுத்து வருகிறது.
சிவசேனாவின் அதிகாரப்பூர்வ பத்திரிகையான சாம்னாவில் இது தொடர்பாக தெரிவிக்கப்பட்டுள்ளதாவது:
அயோத்தியில் ராமருக்கு கோவில் கட்டுவது என்பது ஒரு தேசிய பணி. அயோத்தியில் உரிய கோவில் அமைப்பில் இருந்து நமது கடவுள் ராமர் வெளியேறப்பட்டுவிட்டார்.
முறையாக கட்டிட அமைப்புள்ள கோவிலில் ராமர் வசித்தாக வேண்டும். ராமரின் ஆசீர்வதத்தால் ஆட்சிக்கு வந்தவர்கள் இனியும் வெட்கப்பட வேண்டும். உங்களுடைய வனவாசம் முடிவுக்கு வந்துவிட்டது.
இப்போது கோவில் கட்டுவதற்கான கற்கள் குவிக்கப்பட்டு வருகிறோம். கற்களை செதுக்கிக் கொண்டே இருக்க முடியாது. மத்திய அரசு உடனே ராமர் கோவில் கட்டுவதற்கான தேதியை அறிவிக்க வேண்டும்.
இவ்வாறு சாம்னாவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.