For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

இங்கிருந்து ஓடிடுங்க.. இல்ல 10 அடி ஆழத்துல புதைச்சிடுவேன்.. மாபியாகளுக்கு ம.பி. முதல்வர் வார்னிங்!

Google Oneindia Tamil News

போபால்: மத்திய பிரதேசத்தை விட்டு சென்றுவிடுங்கள். இல்லாவிட்டால் 10 அடி குழி தோண்டி புதைத்துவிடுவேன் என மாபியாக்களுக்கு முதல்வர் சிவராஜ் சிங் சவுகான் எச்சரிக்கை விடுத்துள்ளார்.

முன்னாள் பிரதமர் அடல் பிகாரி வாஜ்பாயின் பிறந்தநாள் இன்று கொண்டாடப்படுகிறது. இது நல்லாட்சி தினமாக மத்திய பிரதேசத்தில் கொண்டாடப்பட்டது. இந்த நிகழ்ச்சியில் முதல்வர் சிவராஜ் சிங் சவுகான் கலந்துகொண்டார்.

Shivraj Singh Chouhan warning to Mafia to leave Madhya Pradesh

அப்போது அவர் கூறுகையில் நான் இப்போது எல்லாம் மிகவும் ஆபத்தான மனநிலையில் உள்ளேன். மாநிலத்தில் சமூகவிரோத செயல்களில் ஈடுபடுவோரை என்னால் சகித்து கொள்ள முடியாது. மத்திய பிரதேசத்தை விட்டு வெளியேறுங்கள்.

இல்லாவிட்டால் 10 அடி பள்ளம் தோண்டி புதைத்துவிடுவேன். நீங்கள் எங்கிருக்கிறீர்கள் என்பது யாருக்கும் தெரியாமல் போய்விடும். மத்திய பிரதேசத்தில் நடைபெறுவது நல்லாட்சியாகும். சட்டத்திற்கு புறம்பான செயல்களில் யார் ஈடுபட்டாலும் நான் பொறுத்துக் கொள்ள மாட்டேன் என்றார்.

English summary
CM Shivraj Singh Chouhan warns Mafia to leave Madhya Pradesh.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X