For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

வக்கிரத்தின் உச்சம்.. பிறந்து 28 நாட்களே ஆன குழந்தை பலாத்காரம்

Google Oneindia Tamil News

புலந்த்சகர், உ.பி.: பிறந்து 28 நாட்களே ஆன பச்சிளங்குழந்தை பாலியல் வன்கொடுமைக்கு ஆளான சம்பவம் உத்திரப்பிரதேசத்தில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

காமக் கொடூரர்களின் இச்சைக்கு வயது வித்தியாசமில்லாமல் பெண்கள் இரையாவது நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது.

இந்நிலையில், உத்திரப்பிரதேச மாநிலம் புலந்த்சகர் அருகே ஆசிப் நக்லா என்ற கிராமத்தில் பிறந்து 28 நாட்களே ஆன பச்சிளங்குழந்தை பாலியல் வன்கொடுமைக்கு ஆளாகியுள்ளது. பாதிக்கப்பட்ட குழந்தையின் தந்தை முகேஷ் மற்றும் தாயார் கடந்த ஞாயிறன்று பஞ்சாயத்து தேர்தலில் வாக்களிக்கச் சென்ற போது இந்த கொடுமை நடந்துள்ளது.

வாக்களித்த பின் வீடு திரும்பிய பெற்றோர், குழந்தை தொடர்ந்து அழுவதைக் கண்டு அவரது உடலைப் பரிசோதித்துள்ளனர். அப்போது அக்குழந்தையின் பிறப்புறுப்பில் ரத்தம் நிற்காமல் வெளியேறியதைக் கண்டு அவர்கள் அதிர்ச்சியடைந்தனர்.

உடனடியாக அக்குழந்தை சிகிச்சைக்காக அருகில் இருந்த அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டது.

குழந்தையை பாலியல் வன்கொடுமைக்கு ஆளாக்கியதாக அதே கிராமத்தைச் சேர்ந்த நமீனோ (25) என்ற கொடூரன் மீது அந்தக் குழந்தையின் தந்தை புகார் கொடுத்துள்ளார்.

இந்த சம்பவம் தொடர்பாக விசாரணை நடத்தப்பட்டு வருவதாகவும், தலைமறைவாக உள்ளநக்லாவைத் தேடும் பணி முடுக்கி விடப்பட்டுள்ளதாகவும் அம்மாவட்ட எஸ்.பி பங்கஜ் பாண்டே தெரிவித்துள்ளார்.

English summary
An infant was allegedly raped by a 25-year-old man in village Asif Nagla, under Khurja Dehat Police Station in Bulandshahr.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X