திட்றதுன்னா என்னை திட்டுங்க, என் மகனை விட்டுடுங்கய்யா: கெஞ்சும் மல்லையா
டெல்லி: என் மகனுக்கும் என் தொழிலுக்கும் எந்த சம்பந்தமும் இல்லை. அதனால் அவரை பழிக்காதீர்கள் என்னை மட்டும் திட்டுங்கள் என தொழில் அதிபர் விஜய் மல்லையா ட்விட்டரில் தெரிவித்துள்ளார்.
தொழில் அதிபர் விஜய் மல்லையா 17 வங்கிகளில் ரூ.9 ஆயிரம் கோடி கடனை வாங்கி திருப்பிக் கொடுக்காமல் வெளிநாட்டிற்கு சென்றுவிட்டார். இது குறித்து வங்கிகள் அவர் மீது வழக்கு தொடர்ந்துள்ளன.
இந்நிலையில் விஜய் மல்லையாவின் மகன் சித்தார்த்தை மக்கள் சமூக வலைதளங்களில் கடுமையாக விமர்ச்சித்து வருகிறார்கள். இதை பார்த்த மல்லையா தனது மகனை திட்ட வேண்டாம் என்று ட்விட்டரில் கேட்டுக் கொண்டுள்ளார்.
இது பற்றி மல்லையா ட்விட்டரில் கூறியிருப்பதாவது,
My son Sid does not deserve all this hatred and abuse. He has had nothing to do with my business. Shower abuse on me if you must but not him
— Vijay Mallya (@TheVijayMallya) March 29, 2016
இந்த வெறுப்பு மற்றும் திட்டுகளை வாங்க என் மகனுக்கு அவசியம் இல்லை. என் வியாபாரத்திற்கும் அவருக்கும் எந்த தொடர்பும் இல்லை. வேண்டுமானால் என்னை திட்டுங்கள் என் மகனை அல்ல என்று தெரிவித்துள்ளார்.