நாட்டின் முதல் “ஆர்கானிக்” வேளாண்மை மாநிலமாக சிக்கிம் அதிகாரபூர்வ அறிவிப்பு!
கேங்டாக்: இந்தியாவின் முதல் உயிர்ம வேளாண்மை மாநிலமாக "பூக்களின் தேசம்" சிக்கிம் அதிகாரபூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.
மண்ணுக்கும், உடலுக்கும் கேடுவிளைவிக்கும் வேதி உரங்களை பயன்படுத்தாமல் முற்றிலுமாக இயற்கை உரங்களை பயன்படுத்தி மட்டும் செய்யப்படுவது உயிர்ம வேளாண்மை ஆகும்.
6 லட்சம் மக்களையும் 75 ஆயிரம் ஹெக்டேர் வேளாண்மை நிலத்தைக் கொண்ட சிக்கிம் மாநிலம் முற்றிலும் உயிர்ம வேளாண்மைக்கு மாறும் முடிவை கடந்த 2003 ஆம் ஆண்டில் எடுத்தது.
வேதி உரங்களுக்கு தடை:
ஆனால் அந்த முடிவிற்கு உடனடியாக வெற்றி கிடைக்கவில்லை. வேதி உரங்களுக்கு தடை விதித்தது உட்பட பல்வேறு நடவடிகைகளுக்கு பிறகு, கடந்த டிசம்பர் மாதம் முழுமையாக உயிர்ம வேளாண்மையில் ஈடுப்படும் மாநிலம் என்ற அதிகாரபூர்வ தரச் சான்றிதழை சிக்கிம் பெற்றது.
முறையான அறிவிப்பு:
ஆனாலும் பிரதமர் மோடியின் நேற்றைய பயணத்தின் போதுதான் இதற்கான முறையான அறிவிப்பு வெளியாகியுள்ளது. சிக்கிம் மாநிலமும் உயிர்ம வேளாண்மை மாநிலமாக அறிவிக்கப்பட்டுள்ளது.
80 மில்லியன் டன் பொருட்கள்:
இந்தியாவில் ஆண்டுக்கு 1.24 மில்லியன் டன் உயிர்ம வேளாண்மை பொருட்கள் உற்பத்தி செய்யப்படுகிறது. இதில் 80 மில்லியன் டன் பொருட்களை சிக்கிம் உற்பத்தி செய்கிறது.
உயிர்தரும் உயிர்ம வேளாண்மை:
சிக்கிமை போலவே கேரளா, மிசோரம் மற்றும் அருணாச்சல பிரதேசம் ஆகிய மாநிலங்களும் உயிர்ம வேளாண்மைக்கு அதிக முக்கியத்துவம் கொடுத்து வருகின்றன என்பது குறிப்பிடத்தக்கது.